Pages

Sunday, August 11, 2013

வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன்

  ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றதும் நம்  நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும் பால்கோவாவும் தான். ஆனால் அங்குள்ள சிவன் கோவிலின் பெருமையை பெரும்பாலனவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

   பாடல் பெற்ற சிவதலமான இக் கோயில் ஸ்ரீவில்லிபுதூர் - தென்காசி சாலையில் அமைந்துள்ளது. சிவ பெருமான் வைத்தியநாதனாக சிவகாமி அம்பாள் சமேதராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். எல்லா சிவன் கோவிலைப் போலவே இதுவும் அமைந்துள்ள இக் கோயிலின் தனிச் சிறப்பு  என்ன?

   இச் சிவன் பல்வேறு வியாதிகளுக்கு வைத்தியம் (அருள்) செய்கிறார். முக்கியமாக இங்கு நடைபெறும் மகாதேவ அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாதேவ அஷ்டமியன்று முதல் பந்தியில் சிவன் உண்பதாக ஐதீகம். ஆகவே இந்த பந்தி முடிந்ததும் பொதுமக்கள் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்  செய்வது வழக்கம்.

   இதில் ஜாதி பேதமின்றி, பதவி, பணம் , அந்தஸ்து பாகுபாடின்றி பலரும் உருளுவதைக் காணலாம். இதில் அங்கப்பிரதட்சணம் செய்தால் தீராத வயிற்றுவலி தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. அதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். இதுவும் தவிர பலரும் பல வேறு கோரிக்கைகளுக்காக நேர்ந்து அங்கப்பிரதட்சிணம் செய்வர்.

  இதுவும் தவிர பலரும் அறியாத விஷயம் இது. சிவனுக்கு அபிஷேகம் செய்யும் முதல் தீர்த்தத்தை பருகினால் புற்று நோய்க்கு அருமருந்தாகும்.  சிவனுக்கு திருவனந்தலுக்கு பால் கொடுப்பதன் மூலம் வலிப்பு நோய் தீரும்.

  இதையும் தவிர பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள இக் கோயிலை வாழ்க்கையி ஒரு முறையேனும் தர்சித்தேதீர வேண்டும் என்று சங்கல்ப்பம் செய்து கொண்டு வாருங்கள். வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன். சிந்தை குளிர அருள்வான் சிவன்.

http://www.valaipookkal.com/http://www.thamizmanam.net

Friday, August 9, 2013

தெரிந்த கோயிலும் தெரியாத அற்புதங்களும்

 மானிடப் பிறப்பில் எந்த ஒரு உயிரும் இறைவனை உண்மையான பக்தி மற்றும் இறைத் தொண்டினால் அடைய முடியும். இதை ஒரு தெய்வம் நிருப்பித்தால் இன்னும் ஆதாரம் வலுவாக இருக்குமல்லவா?. அப்படி  ஒரு நிகழ்வு தான் ஸ்ரீ ஆண்டாள். பூமாதேவியே ஸ்ரீ ஆண்டாளாக உருவெடுத்து   பெருமாளின் பால் தீராத பக்தி கொண்டு அந்த ரெங்கனையே மணாளனாக அடைந்தாள். இது எப்படி சாத்தியம்? இதில் உள்ள தூய பக்தியே சாட்சி.

  ஆனால் இந்தக் கதையெல்லாம் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே நான் இதைப் பற்றி இன்று பேசப் போவதில்லை. அந்த பெண்தெய்வத்தின் திருக்கோவிலில் உள்ள மிகுந்த அதிர்வுள்ள பகுதிகளைப் பற்றி பேசப் போகிறேன்.

   நான் விவரிக்கும் இடத்தைப் பார்த்து இந்த இடமா? என்று தயவு செய்து சந்தேகப் படாதீர்கள். இது பன்னெடுங்காலமாக முன்னோர்கள் வழிபாடு செய்து  அதை வழி வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச்  சொல்லிவிட்டுச் சென்ற இடங்கள் இது.

  சரி மெதுவாக ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலுக்குள் நுழையுங்கள். அங்கு மேல்தடாகத்தில் இருக்கும் பெருமாளை தர்சித்து விட்டு   கீழே பக்கத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டு விட்டு மெதுவாக நந்தவனத்திற்குள்  நுழையுங்கள். அமைதியே உருவான அந்த இடத்தில் பறவைகள்  தங்களுடைய கூவலால் அன்புடன் வரவேற்கும்.

     தாயார் பிறந்த அந்த இடத்தை தரிசித்துவிட்டு முன்புறமுள்ள அந்த மண்டபத்தில் கண்மூடி அமருங்கள். அங்குள்ள அதிர்வுகள்  நம் மனோரதங்களை சொல்லாமலேயே நிறைவேறி கொடுக்கும்.   அங்கிருந்து வெளியே வந்து ஆண்டாள் கோவிலுக்குள்  சென்று வழிபாடுகள் முடித்தபின் உள் பிராகாரத்தில் தாயாரின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படத்தின் கீழ் அமர்ந்தோ அல்லது நின்ற வண்ணமோ நமது வேண்டுதல்களை தாயாரிடம் தெரிவிக்கலாம். இந்தப் பகுதியில் தெரிவிக்கபடும் பிரார்த்தனைகள்  தாயாரால் உடனடியாக நிறைவேற்றப் படுவதாக ஐதீகம். இதை செயலிலும் காணலாம். ஆனால் இன்றைய கூட்டமான சூழலில் அமைதியாக அமரமுடியவில்லை அல்லது ஒருமுகப் படவில்லை என்றால் அங்கிருந்து கிளம்பி வெளிபிராகாரத்திற்கு வந்துவிடுங்கள்.

      வெளிபிராகாரத்தில் உள்ள கை கூப்பிய ஆஞ்சநேயரை வணங்கி  அப்படியே நேராகச் சென்றால்  அங்கு பெரும்பாலும் பூட்டப் பட்டிருக்கும் ஸ்ரீராமர் சன்னதியில் அமருங்கள். இப்பகுதிக்கு பொது மக்கள் அதிகம் வருவதில்லை. ஆளரவமற்ற அந்தப் பகுதியில்  கண்மூடிஅமர்ந்தாலே  போதும் நம் உண்மையான முகம் நமக்குத் தெரிந்துவிடும். இந்த சக்திமிக்க அதிர்வுள்ள இந்த இடம் எதிர்காலத்தில் பெருந்திரளான மக்கள் அமர்ந்து வழிபடும் இடமாக  மாறப் போவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

   பிறகு  அப்பிராகாரத்தின் மறுபகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்கி வெளியே வந்துவிடலாம். ஆனால் இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பகுதிக்குச் சென்று வழிபட்டு வந்தால் சர்வ நிச்சயமாக, மன் இறுக்கம் மறைந்து  ஒரு நிம்மதியை கோயிலைவிட்டு வெளிவரும்  முன்னரே உணர்வீர்கள் என்பது உறுதி.

  அடுத்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் முயன்று பாருங்கள். பதில் கிடைக்கும்.
http://www.valaipookkal.com/
                                                                              புதிதாய் இன்னமும் சொல்வேன்......www.valaipookkal.comwww.thamizmanam.com

Sunday, August 4, 2013

இந்திய ராணுவம். - ஒரு சாதனைச் சிகரம்.

"  நாங்கள் கண்விழித்து காப்பதால் தான் நீங்கள் கண் மூடி நிம்மதியாகத் தூங்குகின்றீர்கள்"  - இது  எல்லைப் பகுதியைக் காக்கும் ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனும் கூறும் வாசகம்.   மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒர் சாதாரண வாசகமாகத் தெரியும். ஆனால்  அவர்கள் அங்கு ஆற்றும் அரும் பணிகள் யாவும் வெளியே தெரிவதில்லை.

   சமீபத்தில் facebook ல் இந்திய ராணுவத்தின் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ள பலவற்றை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உதாரணமாக ஒரு செய்தி. ஒரு சாதாரண ஏணியில் ஏறுவதற்கே நாம் பல முறை யோசித்து , பலமாக உள்ளதா என்று பார்த்து பின்புதான் ஏறுவோம். ஆனால் சியாச்சின் பகுதியில் பனிக்காற்றில் ஐஸ்கட்டிகள் பறக்க ஒரு மலையிலிருந்து மற்றோர் மலைக்கு ஏணி மூலமாக படுக்கை வசத்தில் கடக்கும் காட்சியை புகை படமாக எடுத்து அனுப்பியிருந்தனர். விழுந்தால் அதள் பாதாளம்.

     மயிர்கூர்செரியும் அக்காட்சியைப் பார்த்த பொழுது ஒவ்வொரு இந்திய ராணுவவீரன் மீதும் மரியாதை வந்தது. தேச நலனைப் பெரிதாகக் கருதாமல் ராணுவத்திற்காக வாங்கப் படும் ஒரு சிறு ஆணியில் கூட லஞ்சம் வாங்கும் நமது அரசியல் வாதிகள். தரமற்ற துப்பாக்கி முதல் ஹெலிக்காப்டர் வரை நம் தலையில் கட்டும் அந்நிய நாடுகள். தீபாவளி பொம்மைத்துப்பாக்கியைக் கூட சுட்டுப் பார்க்காத லோக்கல் அரசியல்வாதிகள் முதல் பிரதமர் கனவுகாணும் முலாயாம் வரை கண்மூடிக் கொண்டு இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் தலைவர்கள். வெள்ளித் திரையில் ஒரு கையில் துப்பாக்கியை ஏந்திய படி நீண்ட வசனம் பேசி பிறகு சிறு காயம் கூட படாமல் 5 அடி துரத்தில் எதிரியைத் தாக்கி அழிக்கும் நாயகர்கள். ஒரு முறையாவது எல்லைப் பகுதிக்குச் சென்று அவர்களை மகிழ்வித்திருப்பார்களா?
 
    இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு அன்பருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள். உங்களுக்கு face book ல் account இருந்தால் தயவு செய்து INDIAN ARMY பகுதியைத் தேர்ந்தெடுத்து LIKE கொடுங்கள். அவர்கள் அனுப்பும் அற்புதமான புகைப்படங்களுக்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது அவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்க வழிவகுக்கும். குடும்பம் குழந்தைகளைப் பிரிந்து எங்கோ ஒரு எல்லைப் பகுதியில் இந்த நாட்டைக் காக்கும் அந்த வீரர்களுக்கு ஒர் அருமருந்தாக இது அமையும்.http://www.thamizmanam.com/www.valaipokkal.com
   

Tuesday, July 30, 2013

தெலுங்கானா - கிளர்ச்சியின் திறவுகோல்

  இன்று ஐக்கிய முன்னணி கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் கூடி தனித் தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இனி இந்தியாவில் புதிய ஒரு மாநிலமாக தெலுங்கானா உருவாகும்.  இதன் மூலம் இந்திய வரைபடத்தில் ஒரு மாநிலத்திற்கான இடத்தில் புதிய வண்ணமாகத் தெரியும். அவ்வளவு தான். இதைத் தவிர வேறு எதுவும் புதிதாக நடந்துவிடப் போவதில்லை.

  இவ்வளவு நாட்களாக தனித் தெலுங்கானா கோரி போராட்டம் நடத்தியவர்கள் தெலுங்கானா என்ற மாநிலம் இல்லாததால் தான் ஆந்திரா மொத்தமும் வறுமையின் பிடியில் இருப்பது போலவும், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போலவும் பலவாறாக பேசி மக்களை, குறிப்பாக மாணவர்கள், அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் கிளர்ச்சியிலும் ஈடுபட மனமாற்றம் செய்தனர்.

  இனிமேல் மேற்சொன்ன எந்த கஷ்டமும் தெலுங்கானா மாநிலத்திற்கு வராது, தேனாறும், பாலாறும் வெள்ளமாக ஓடும் என்று நினைத்தால் அவர்கள் நினைப்பில் மண் தான் விழப் போகிறது. முதலில் நிர்வாகத்தில் எந்தெந்தப் பகுதி யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். அது ஒரு மாதிரியாக சரியான பின்புதான் மக்கள் சம்மந்தமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார்கள். இதற்கிடையில் தனித் தெலுங்கானா கூடாது என்று கூறும் அமைப்பினர்களின் கிளர்ச்சியை வேறு இரு மாநிலங்களும் அடக்க வேண்டியிருக்கும்.இதையெல்லாம் விட இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வாழும் சராசரி மக்களின் நிலையே மிகவும் கஷ்டத்திற்குரியதாக இருக்கும். இவர்கள் எந்த ஒரு, அரசின் உதவியைப் பெற வேண்டியிருந்தாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்தின் காரணமாக அலைக்கழிக்கப் படுவார்கள். (இதில் அரசு அதிகாரிகளின் அலட்சியம் மிக அதிகமாக இருக்கும்)

    இனி மத்திய அரசிற்கு புதிய சிக்கல் ஏற்படும். இனி காங்கிரஸ் வரப் போவதில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் பா.ஜ.க வும் தனித் தெலுங்கானா விற்காக போரட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் எதிர்காலத்தில்  எந்த ஒரு தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடந்தாலும் பா.ஜ.க வும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உடனடியாக கூர்க்காலாந்து பிரச்சனை துவங்கிவிடும். அவர்கள் ஏதடா சாக்கு என்று காத்திருந்தார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

   பிறகு விதர்பா மாநிலம், அப்புறம் வேறு ஏதாவது ஒன்று என்று புதிது புதிதாக கிளம்பிக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம்  தங்களுக்கென்று மாநிலக் கோரிக்கையை வைக்கும். இதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு இந்த கிளர்ச்சியாளர்களை அடக்கவே நேரம் சரியாக இருக்கும். சாலையின் ஒரங்களில் உள்ள மரங்கள் யாவும் நடு ரோட்டில் கிடக்கும். பெரும் பாறைகள் யாவும் தண்டவாளங்களுக்கு  குறுக்கில் போடப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கீழ் நோக்கிச் செல்லும். இதைத் தவிர வேறுஎதுவும் புதிதாகவும் உருப்படியாகவும்  நிகழப்போவது ஓன்றும் இல்லை.http://www.thamizmanam.com/www.valaipookkal.com

Sunday, July 28, 2013

அரசியல்வாதிகளா? ஆசிர்வாதம் பெற்றவர்களா?

 தயாளு அம்மாளுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள்  பரிசோதனை. - செய்தி. இந்தக் கட்டுரையை நாம் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களது மனைவியாருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். அல்லது அவருக்கும் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படலாம்.இதுவே ஒரு குப்பனுக்கோ சுப்பனுக்கோ நிஜமாக இந்த வியாதி இருந்தாலும் அது நீதிமன்றங்களின் காதில் ஏறுமா என்பது  கேள்விக்குறியே.

  ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு அரசியல் தலைவரும் எந்த ஒரு வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டாலும் ஏதாவது ஒர் வியாதி பெயரைச் சொல்லி முதலில் தற்காலிக விடுதலை பெறுகின்றனர். (ரூம் போட்டு யோசிப்பார்களோ) பிறகு சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப்  பயன்படுத்தி தப்பித்து விடுகின்றனர் அல்லது ஜாமின் என்றபெயரில் தங்கள் காலம் முடியும் வரை சுதந்திரமாக வெளியில் உலாவுகின்றனர் மேலும் தப்புக்கள் செய்தபடி.இவர்கள் இறந்தால் முக்கிய சாட்சி இல்லை என்று காரணம் காட்டி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது. மேலும் இறந்த அரசியல் தலைவர் தியாகி ஆக்கப் பட்டு சிலையாய் முக்கிய இடங்களில் நின்று மக்களுக்கும் பறவைகளுக்கும் அருள் பாலிக்கின்றனர். இதில் எந்த ஒரு கட்சியும் விதிவிலக்கு இல்லை.

    அவர்களது  வாரிசுகள் அவர்கள் சேர்த்த சொத்துக்களை வைத்துக் கொண்டு பெயரளவிலோ அல்லது முழுமுச்சாகவோ மக்கள் தொண்டு(அரசியல்) புரிகின்றனர்.இப்படிப் பட்ட தலைவர்களைக் கொண்ட தொண்டர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத்தேவையில்லை. இங்கு மக்கள் நலம் என்பது புறக்கணிக்கப்பட்டு சுயநலம் மேலோங்கி நிற்கிறது.

       இதற்கப்பாலும் இந்தியா முன்னேற்றப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவது என்பது முற்றிலும் மக்களின் பிரார்தனையே. பாரதி இன்று இருந்தால் " அரசியல்வாதியாய் பிறக்கவே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று பாடியிருப்பார். "என்று மறையும் இந்த அரசியல்வாதிகளின் அட்டகாசம். என்று மலரும் ஒரு தூய தேசம்" என்று நீங்கள் கேட்பது என் காதிலும் விழுகிறது.www.valaipookal.comhttp://www.thamizmanam.com/

 

 

Thursday, July 25, 2013

தமிழால் இணைவோம்: கூடங்குளம் - ஒரு அறிக்கை அணு உலை.

தமிழால் இணைவோம்: கூடங்குளம் - ஒரு அறிக்கை அணு உலை.:  ஒரு வழியாக கூடங்குளம் முதல் அணு உலையை செயல்பட வைத்து, இரண்டாவது அணு உலைக்கு மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியுள்ளது. இதில் என்ன ஆச்ச...

கூடங்குளம் - ஒரு அறிக்கை அணு உலை.

 ஒரு வழியாக கூடங்குளம் முதல் அணு உலையை செயல்பட வைத்து, இரண்டாவது அணு உலைக்கு மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அது ஒன்றும் இல்லை. ஆனால் இனிமேல் தான் அறிக்கைப் போர் ஆரம்பிக்கும். இதற்கு   சிங்கம் -2, பில்லா-2 மாதிரிஅணு உலை -2என்று பெயர் சூட்டப்பட்டு காட்சிகள் அரங்கேறும்.

   முதலீல் துவக்குவது அணு உலை எதிர்ப்பாளர்கள். இவர்கள் தங்களுக்கென்று ஒரு கோஷ்டியைச் சேர்த்துக் கொண்டு அற(அறிக்கை)ப் போரை ஆரம்பிப்பார்கள். மறுபடியும் முதலிலிருந்து அணு உலைப் பாதுகாப்பற்றது என்று தொடங்கும்.

  அடுத்த காட்சி வேறு வேலையின்றி, தங்கள் முகங்களை மக்கள் மறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு இடம் கூட ஜெயிக்காத தலைவர்கள் தங்கள் போராட்டப் பணியைத் தொடங்குவார்கள். இவர்களது  வேலை போராட்டக்காரகளுக்கு ஆதரவு மற்றும் அணு உலை என்றால் என்ன என்று தெரியாத பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் கல்லூரி வகுப்புக்களில் கவனம் செலுத்த விரும்பாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள்.

   இதற்கிடையில் காமெடிக் காட்சியாக மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அறிக்கைகள் வரும். அவையாவையும் "வரும் ஆனா வராது" பாணியில் இருக்கும்.

  திரிலிங்காக இருக்கவேண்டிய இடங்களை தொலைக் காட்சி ஊடகங்கள் பிடித்துக் கொள்ளும். இதற்கென்று அணு உலை ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள்( இவர்கள் பூமியைக் காக்கும் பொது நலவாதிகள்) மற்றும் கட்சிகாரர்கள் என 4 பேர்கள் கொண்ட ஒரு குழு பேசத்துவங்குவார்கள். இவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொள்ளும் போது விளம்பர இடைவெளி வந்துவிடும். இதற்கிடையில் 2 கதாநாயகன் உள்ள சண்டைக் காட்சிகளில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்க இயக்குனர்கள் திணறுவது போல நீதிமன்றங்கள் பொத்தாம் பொதுவாக ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், மற்றும் பொது நல விரும்பிகள் என்று ஒரு குழு அமைத்து சண்டைக் காட்சிகளை முடிவுக்குக் கொண்டுவது கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவார்கள்.

   கிளைமேக்ஸ் காட்சியாக அணு உலை ஒருநாள் செயல் படத்துவங்கும். அன்று தான் உச்சகட்ட அறிக்கைப் போர் நடக்கும். ஆதரவாளரகள் உண்மை!க்கு கிடைத்த வெற்றி என்றும், எதிர்ப்பாளர்கள் அடுத்தகட்ட போரட்டம் பற்றி கூடி முடிவெடுப்போம் என்றும் தெரிவிப்பார்கள்.(அது வரை அடுத்தகட்டம் பற்றி யோசிக்கமாட்டாகளாம்) ஒரு பிரிவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்குவார்கள். இன்னொரு பிரிவினர் கறுப்புக் கொடி குத்தி துக்கம் அனுஷ்டிப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள்  இவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்று கூறிவிட்டு தனது தினப் படியான வேலைகளைத் தொடந்து செய்வார்கள். இப்படியாக அணு உலை சினிமாவிற்கு end card  போடப்படும்
    ஆனால் ஒன்று இனி இந்தியாவில் ஒரு அணு உலையில் மின்சாரம் வருகிறதோ இல்லையோ அறிக்கை  தவறாமல் வரும் என்பது மட்டும் உறுதி.http://www.thamizmanam.com/
  

Thursday, July 18, 2013

வாலி என்னும் வாலிபக் கவி

  கவிஞர் வாலி  இன்று மாலை எமனின் இரக்கமின்மையால் இறந்தார். புகழாரம் சூட்ட பலர் உண்டு. ஆனால் ஒரு சாமானியனின் புலம்பலாக இதை சம்ர்ப்பிக்கிறேன்.

   "வாலிபக் கவி" என்று வாலிக்கு ஒரு பெயர் உண்டு. அது அவரின் எழுத்துக்குக்  கிடைத்த மரியாதை. புராண வாலிக்கு ஒரு சிறப்புண்டு. அவரை எதிர்த்துப் போரிடுபவர்களின் பலத்தில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்று. ஆனால் நமது கவிஞர் வாலிக்கோ அவர் எதிரில் யார் நின்றாலும் சரி மொத்த பலமும் கவிஞருக்குச் சென்று விடும். அப்படிப் பட்ட ஒரு சிறப்பைப் பெற்றவர். அது அழகிய சிங்கர் ஜீயராக இருந்தாலும் சரி அருமையான இசை அமைப்பாளராக இருந்தாலும் சரி.

     அவரின் திரைத் துறை சாதனைகளைப் பற்றிச் சொல்ல பலர் இருக்கின்றனர். ஆனால் அவரது அவதார புருஷனைப் படிக்கும் போது சம கால கம்பராகத் தெரிகிறார். ஆனால் "ஆசை யாரை விட்டது" என்று முகவுரையும் எழுதியிருக்கிறார். மகாபாரதத்தையும், கிருஷ்ணவிஜயத்தையும், இராமானுஜரையும் கவிதையாய் நமில் கலந்த அந்த ஜீவன் இப்போது காற்றில்...

   வாலி என்று சொன்னால் வீரம் வருகிறதோ இல்லையோ கவிதை கண்டிப்பாக வரும். தமிழுக்கு நிகரான ஆங்கிலப்புலமை அவரது சிறப்பு. கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் வாலி எழுதிய ஒரு கவிதை," எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேரில் எமனும்  ஒருவன். ஒரு அழகான கவிதைப் புத்தகத்தை கிழித்துவிட்டான்"

     அதைச் சற்றே மாற்றி

       "  கவிதைப் புத்தகம் என்றாலே காலனுக்குப் பிடிக்காதோ
           மரணத்தின் மூலம் ஒரு மானிடக் கவிதையை கிழித்துவிட்டான்"

valaipookal.comhttp://www.thamizmanam.com/

Wednesday, July 17, 2013

மொழிப் பாடங்கள் - இனிப்பா? திணிப்பா?

  சில நாட்களுக்கு முன் ஒரு  நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளில் பெரும்பாலோர் "தமிழ் பாடத்தை ஒரு கட்டாயத்தின் பேரில் , விருப்பமின்றி படிப்பதாக" கூறியது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இதற்கு காரணம் யார்? என்ன? என்பதையெல்லாம் பார்த்தோமேயானால் அதற்கு ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் தான்.

    தமிழ் மேல் காதல் கொண்ட ஆட்சியாளர்களால் தமிழ்க்கு மரியாதை வந்ததாகத் தெரியவில்லை. மாறாக அதன் மீது வெறுப்புதான் அதிகமாகியுள்ளது. காரணம் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் ஆங்கிலவழிக்கல்வியும் ஹிந்தியும் மேலும் வேறு ஏதேனும் மொழியும் கற்று தங்கள் அடித்தளத்தை பலப்படுத்திக் கொள்ள, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத காரணத்தினால் வேறு எந்தமாநிலத்திலும் வேலை வாய்ப்பு பெற வழியில்லாத நிலை ஏற்பட்டது.

     இதனால் பாதிக்கப் பட்ட ஒரு தலைமுறை தமிழை மட்டும் கற்பதால் பயன் இல்லை என்ற எண்ணத்திற்கு வந்தனர். இதன் விளைவு முற்றிலும் ஆங்கிலக் கல்வி என்ற முடிவிற்கு வந்தனர்.இதுவும் தவறான முடிவு. காரணம் அடிப்படைக் கல்வி எனப்படும் வாய்ப்பாடு, ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிகளின் வார்த்தைகளுக்கு  அர்த்தம் ஆகியவை சரியான அளவில் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. இதன்விளைவாக குழந்தைகள் மேற்வகுப்புகளுக்கு வரும்போது பாடங்களை புரிந்து கொள்ளமுடியாமல் குருட்டு மனப்பாடம் செய்கின்றனர்.

    ஆனால் இதைப் பற்றி பெற்றோர்களுக்கோ அல்லது அந்த குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கோ கவலை துளிக் கூடக் கிடையாது. பெற்றோர்களைப் பொறுத்தவரை தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. கல்வி நிறுவனங்களுக்கோ 100% தேர்ச்சி மட்டுமே குறி. ஆகவே அவர்களுக்கு தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. விளைவு தாய் மொழி எனக்கு பிடிக்கவில்லை என்ற பதில்.
   
    மற்றோர் பிரிவினர் இருக்கின்றனர். இவர்களுக்கு தங்கள் குழந்தைகள் ஹிந்தியில் உள்ள அத்தனை தேர்வுகளையும் 10 வகுப்பிற்குள் முடித்துவிட்டனர் என்று பெருமையடித்துக் கொள்ளவேண்டும். அதற்க்காக தமிழ் "அ,ஆ" வே  சரியாகத்தெரியாத வயதில் அவர்களை ஹிந்தித் தேர்வுகளை எழுத அனுப்புகின்றனர். இதன் விளைவு, அக்குழந்தைகள் எதையும் புரியாமல் படித்து  அந்த மொழியை பேசவும் தெரியாமல், புரிந்து கொள்ளவும் முடியாமல் "மொட்டையாக அட்டை"(MARK SHEETS)  களை மட்டும் சேர்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
         1000கணக்கான நேயர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தங்கள் குழந்தைகள் இப்படி பதில் சொல்வதை எப்படி அக் குழந்தைகளின் பெற்றோர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

     ஒரு குழந்தை தன் தாய்மொழியை பிடிக்கவில்லை என்பது தன் தாயை, தாய் நாட்டை பிடிக்கவில்லை என்று கூறுவதற்கு சமம். இந்தக் குழந்தைகள் எப்படி அவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்கள் ஆளாக்கிய இந்த தாய் திருநாட்டிற்கும் நன்றியுடன் இருக்கப் போகிறார்கள். ஜெர்மனியிலோ, சீனாவிலோ ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் மொழியில் தான் பதில் கூறுவார்கள். ஆனால் இரண்டு தமிழர்கள் நேரில் சந்தித்தால் முதலில் தமிழில் பேசிக் கொள்ளமாட்டார்கள். அங்கு ஆங்கிலம் தான் முக்கிய இடத்தை வகிக்கும்.

     திரைப் படத்துறையினர் இன்னமும் மோசம் . அவர்கள் கலையை வளர்ப்பதாகச் சொல்லி தமிழை முற்றிலுமாக கொலை செய்கின்றனர். "ல,ழ, ள" எல்லாவற்றிக்கும். "ல " என்றே உச்சரிக்கின்றனர். அவ்வாறு உச்சரிப்பவர்களை கவிப் பேரரசு களும் கொண்டாடுகின்றனர். இவர்களெல்லாம் தமிழுக்காக உழைப்பவர்களாம்! தமிழுக்காக தன் உயிரையும் கொடுப்பவர்களாம்!!. முதலில் இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கட்டும்.

   தமிழ் குடிதாங்கிகளும் இடிதாங்கிகளும் தங்கள் குழந்தைகளை தமிழில் ஒரு வாய்ப்பாடு  அல்லது ஒரு திருக் குறளை பிழையின்றி சொல்லச் செய்யட்டும். அதன் பிறகு இவர்கள் தமிழுக்காக இன்னுயிரை ஈந்தட்டும்.  ஏற்கனவே  தமிழாசிரியர்களை பெரும்பாலானவர்கள் மதிப்பதில்லை. இந்த மாதிரி இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் வந்தால் போதும் சுத்தமாக மரியாதை என்பது இல்லாமல் போய்விடும். நமக்கே நம் மொழி மீது நம்பிக்கையில்லை எனின் "மெல்லத் தமிழ் இனி சாகும்" நாள் தொலைதூரத்தில் இல்லை.http://www.thamizmanam.comvalaippookkaL.com

Friday, July 12, 2013

கார்ட்டூன் சானல் என்னும் கயவன்.

    இன்றைய குழந்தைகள் சாப்பாடு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் கார்ட்டூன் சானல் இல்லாமல் இருக்காது.  அந்த அளவிற்கு கார்ட்டூன் என்னும்  அசுரன் அவர்களை ஆக்கிரமித்து இருக்கிறான்.  காரணம் யார்? முதலாவதாக சுட்டிக் காட்டப் படுவது பெற்றோர்கள் தான்.  15 வருடங்களுக்கு முன்பு வரை ஒரு சராசரி குடும்பத்தில் உள்ளவர்கள்  குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஏதேனும் கதைகளைச் சொல்லுவார்கள். இது பறவைகள், நிலா என்பதிலிருந்து ஆரம்பிக்கும்.

    தற்பொழுது பிறந்த அன்றே குழந்தைகள் புத்திசாலியாக வேண்டும்! என்ற பெயரில் பெற்றோர்கள்  வாயில் நுழையாத நர்சரி ரைம்ஸ்கள கேட்க வைக்கிறார்கள். இதிலிருந்து தான் அக்குழந்தைகளின் அடிமை வாழ்வு ஆரம்பமாகிறது. குழந்தைகள் சற்று வளர்ந்ததும் கார்ட்டூன் சானல்களை கவனிக்க வைக்கிறார்கள். இது தான் பெற்றோர்கள் செய்யும் மாபெரும் தவறு.

    புரியாத அந்த பிஞ்சு நெஞ்சங்களில் power rangers ம், டோரிமானும் கதாநாயகர்களாக இடம் பிடிக்கின்றனர்.  அவர்கள் பேசும் அபத்தமான தமிழை குழந்தைகளும் பேசுகின்றனர் ( இதை பெற்றோர்களும் ரசிக்கின்றனர் என்பது வேறு விஷயம்). இந்த கார்ட்டூன் சானல்களில் ஒளிபரப்பப் படும் 99% நிகழ்ச்சிகள் மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப் படுபவை. அவர்களின் நடையுடை பாவனகளுக்கு ஒத்துவாராத, எந்த ஒரு வட்டார வழக்கில் புழங்கப் படும் தமிழ் என்பதும் புரியாதபடி  ஒரு கேவலமான குரலில் மொழி மாற்றம் செய்யப் படுகிறது.

    இச் சிறு குழந்தைகளும் power rangers என்பது உண்மை என்று நம்பி அதைப் போலவே முகமூடி, உடைகளையணிந்து.  குதிக்கின்றனர். இப்படி குதித்து அடிப்பட்டது முதல் உயிர் இழந்தது வரை ஏராளமான உண்மைச் சம்பவங்கள் உண்டு. இந்த  நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பு ஒரு மகா சிறிய எழுத்தில்  எச்சரிக்கை செய்கின்றனர். இதை வழங்கும் விளம்பரதாரர்களோ அவர்கள் பொருட்கள் விற்க இத்தகைய கார்ட்டூன் ஹீரோக்களின் உருவங்களை ஸ்டிக்கர்களாகவும், டாட்டூக்களாகவும் கொடுத்து குழந்தைகளை வாங்கத்தூண்டுகிறனர்.

    இனி வரும் காலங்களில் இம் மாதிரியான நிகழ்ச்சிகள் அதிகமாக வரும் . குழந்தைகள் படிப்பதைக் கூட ஒத்திப் போட்டூவிட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கும். இதை ஓரளவாவது கட்டுப்படுத்த நினைத்தால் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு சிறிய பாடல்களைப் பாடி உணவு கொடுங்ககள், தூங்கச் செய்யுங்கள். சற்று பெரிய குழந்தைகளானது நமது இதிகாச புராணங்களில் உள்ள கதைகளைச் சொல்லுங்கள். அதில் இல்லாத வீர தீர பராக்கிரமச் செயல்கள் யாவும் இந்த power rangers லோ அல்லது வேறு எந்த கார்ட்டூன் நிகழ்ச்சிகளிலோ இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அக் கதைகளின் இறுதியில்  சாகசங்கள் யாவையும் மறைக்கப் பட்டு நல்ல நீதிகளே மேலோங்கி நிற்கும்.

     இவையெல்லாம் செய்யத் தவறினால் பின்னால் சமூக வலைதளம்  என்னும் பகாசுரனிடம்  சிறைப் பட வழிவகுக்கும். தங்கள் குழந்தைகளுக்கு அர்ஜுன் என்றும், நகுல் என்றும்,  பெயர் வைத்தால் மட்டும் போதாது. அப்பெயர்களுக்குரிய  நாயகர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூற வேண்டும். இல்லையென்றால் அப் பெயர்கள் யாவும் வெறும் "பெயரளவில்" தான் இருக்கும்.http://www.thamizmanam.com/

Tuesday, July 9, 2013

ஒரு சீரியஸான காமெடி

    இன்றைய நாட்களில் 30 வயதை தொட்டவர்களில் பலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இன்று ஏன் கூட்டுக் குடும்பம் மறைந்து கொண்டு வருகிறது என்பதை இறுதியில் பார்ப்போம்.
 
     கூட்டுக் குடும்பம் என்பது ஒரு அலாதியான அனுபவம். அதை அனுபவித்தவர்கள் இன்று தனிக்குடித்தனமாக இருந்தாலும் மனதளவில் அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வரமாட்டார்கள். கூட்டுக் குடும்பத்தைப் பொறுத்தவரை. பெரியப்பா, சித்தப்பா மக்கள் என்ற பேதம் எதுவும் இருக்காது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்தான் எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்று வழிநடத்துவார்.


    அதில் சண்டைகள் வரும் கோபம் இரூக்கும் .ஆனால் பாசத்திற்கு குறைவு இருக்காது. நிறைய அனுபவங்கள் கிடைக்கு. எல்லாவற்றைப் ப்ற்றியும் விவாதம் நடக்கும். சாதாரண தேங்காய் தொகையலும் சுட்டஅப்பளமும்  கூட தேவாமிருதமாக இருக்கும். எல்லாருடையா மானமும் அனைவர் முன்னிலும் வாங்கப்படும். (குறிப்பாக பரிட்சை மார்க்குகள்) எம்.எஸ்.வி இசை சிறந்ததா? இளையராஜா இசை சிறந்ததா என்று வாதம் நடக்கும். இன்று 60, to 70 வயதில் இருப்பவர்கள் எம்.எஸ்.வி தான் best. என்று சொல்ல இல்லை ராஜா தான் best  என்று கட்சி கட்டிக்கொண்டு மேற்கோளோடு வாதம் நடக்கும்.( அன்று ராஜா வின் இசையை விமர்சித்த பெரிசுகள் இன்று ரகுமானின் இசையை விமர்சிக்கின்றனர். இது பெரிசுகளின் style. மாற்றமுடியாது.)

     ஒருவருக்கு லேசான காய்ச்சல் என்றால் கூட வீட்டின் பெரியவர்கள் முதல் கடைக்குட்டி வரை தனக்குத் தெரிந்த மருந்து பெயர்களையெல்லாம் சொல்லி,பாட்டி வைத்தியம் வரை மருத்துவ உபதேசம் செய்து விட்டு எதற்கும் டாக்டரிம் ஒரு முறை காட்டிவிடு என்று முத்தாய்ப்பு வைப்பார்கள். (இதில் அதிகம் கடுப்பாவது பெற்றோர்கள்.ஆளாளுக்கு அறிவுரை கூறுவதால்.)

    விருந்தினர்கள் வந்தால் அதிகம் குஷியாவது குழந்தைகள் தான்.ஏனெனில் படிக்கவேண்டாமே. அம்மாவுக்கும் கவனிக்க நேரம் இருக்காது. (அவர்கள் சென்றபின் ஒரு double கவனிப்பு இருக்கும் என்பது ஒரு தனிக் கதை). கல்யாணம் என்று வந்துவிடாலோ கேட்கவே வேண்டாம். 10 நாட்களுக்கு முன்னதாகவே வீடு களை கட்டிவிடும். பட்சணம், பூ என்று ஒரு கலவையான வாசனை இருக்கும்.

   நமக்கு டியஷன் எடுக்கும் ஆசிரியர் வந்தார் என்றால் சப்த நாடியும் ஒடுங்கி, அந்த ஆசிரியருக்கு மனத்திற்குள் மொத்த பரம்பரைக்கும் திட்டு விழும். அவர் தன் பங்கிற்கு ஏதாவது ஏழரையைப் போட அதையும் மொத்த மூளையையும் பயன்படுத்தி சமாளிக்க வேண்டியிருக்கும்.

   இப்படி ஒர் அற்புதமான சூழல் தான் கூட்டுக் குடும்பம். இத்தனை இருந்தும் இன்று படிப்படியாக மறைய காரணம் என்ன? இதைப் பற்றி சீரியசாக விவாதிக்க திண்டுக்கல் லியோனி இருக்கும் போது நான் தீர்ப்பு கூறுவது சரியாகாது. அதனால் அந்தப் பொறுப்பை அவருக்கே விட்டு விடுகிறேன்.

ஹி.....ஹி... (நன்றி. குமுதம் அரசு பதில்கள்)http://valaipookal.com

Friday, July 5, 2013

எங்கே செல்லும் இந்த பாதை

 பெற்றோர்களே உங்களுக்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா? தயவு செய்து இக் கட்டுரையைப் படியுங்கள்.  சமீபகாலமாக பொது இடங்களுகளில்  பெரும்பாலான குழந்தைகள் செய்கிற விஷமங்களைப் பார்க்கும்போது இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்ற எண்ணம் வலுத்து வருகிறது. அதிலும் படித்த மேல்தட்டு மக்களின் குழந்தைகள் செய்யும்  சேட்டைகளுக்கு ஓர் அளவே இல்லை.

   உட்காரும் நாற்காலிகளை இழுப்பது, சுவிங்கம், சாக்லேட் போன்றவற்றை மேஜைகளில் ஒட்டுவதும், கண்ணாடிக் கதவுகளைத் திறந்துமூடுவதுமான விஷயங்களை பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை. அந் நிறுவனங்களின் ஊழியர்களோ அல்லது அருகில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருப்பவர்களோ இதை எடுத்துக் கூறினாலும் அவர்கள் அக் குழந்தை அப்படித்தான் செய்யும் என்பது போல இருக்கிறார்கள்.சில பெற்றோர்களோ கோபத்தின் உச்சத்திற்கே சென்று உங்கள் நிறுவனப் பொருட்கள் வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏதுவும் இல்லை. அப்பொருளை வேறு ஒருவருக்கு விற்பதோடு, அம் மாதிரி விஷம குழந்தைகளால் ஏற்படும் நஷ்டத்திலிருந்தும் காப்பாற்றப் படுகின்றனர்

   உங்கள் வீட்டில் உங்கள் குழந்தைகள் இப்படி செய்ய சம்மதிப்பீர்களா? அல்லது வேறு ஒரு குழந்தை உங்கள் வீட்டை இப்படி அசுத்தம் செய்தால்  மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வீர்களா? இந்த இம்சையை சமாளிக்க மால்கள் குழந்தைகள் விளையாட என்று ஒர் இடத்தை ஏற்படுத்தியுள்ளன. சிறு நகரங்களில் அவ்வாறு செய்ய வழிகள் கிடையாது.

   இப்படி  குழந்தைகள் வளர்ந்தால் நாளை இக் குழந்தைகளிடம் அகம்பாவமும் அதிகபிரசங்கித்தனமும் தானே குடி கொண்டிருக்கும்.இவர்களால் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தையும், தங்களின்  வாரிசாக   நல்ல மக்களையும் உருவாக்க முடியும்? உங்களுக்கு உங்கள் குழந்தைகள் மிகவும் உயர்வான விஷயம் தான். ஆனால் இவ்வாறு உங்கள் குழந்தைகள் வளர்ந்தால் உயர்வான ஒர் விஷயம் மிகவும் தாழ்வான நிலைக்குச் சென்றுவிடும் என்பது திண்ணம்.தகுந்த நேரத்தில் கண்டிக்காவிட்டால் குழந்தைகள் சர்வ நிச்சயமாக தவறாகத் தான் வளரும்.  இக் குழந்தைகளைப் பார்த்தால்,

               " எங்கே செல்லும் இந்த பாதை. யாரோ யாரோ அறிவார்" என்றே பாடத் www.valaipookal.com தோன்றுகிறது

Thursday, July 4, 2013

"கிள்ளுக் கீரைகளா? பொது மக்கள்"-- ஒரு வேதனைக் கட்டுரை

    இன்று முதல் என்.எல்.சியில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி, மற்றும் தமிழகம் மின்வெட்டால் பாதிக்கப்படும்  என்பது நிதர்சன உண்மை.  இப்பொழுதுதான் பருவமழை மற்றும் பல்வேறு இடங்களில் மின் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தடையின்றி கிடைத்து வருகிறது.

    அப்பாடி என்று பெருமூச்சு விட்ட நேரத்தில் இப்படி ஒரு இடி. நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி இப்படி ஒரு முடிவு. அப்புறம் நீதிமன்றம், சட்டங்கள் போன்ற வை எதற்காக? மத்திய அரசும் சரி மாநில அரசும்  சரி, தொழிற்சங்கங்களும் சரி தமது நலனை மட்டுமே பெரிதாக கருதுகின்றனர்.

   மின்தடை ஏற்பட்டால் எவ்வளவு உற்பத்தி முடங்கும், மாநிலத்தின் வருமானம் முதல் தனிநபர் வருமானம் வரை எவ்வளவு பாதிக்கும் என்பது இவர்கள் அனைவருக்கும்  தெரியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.

    மத்திய அரசு தற்போது நாடு இருக்கும் நிலையில் இப்படி ஒரு தேவையற்ற ஒரு முடிவை எடுத்து விட்டு முழித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசு ஒரு நல்ல வழிகூறினாலும் அதை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை. காரணம் தற்பொழுது ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் அரசுக்கு நாட்டையே தனியாரிடமும், அந்நிய நாட்டிடமும் அடகு வைப்பது தான் தலையாய கடமை. ஆகையால் அவர்கள் இதைப் பற்றி ஒரு பொழுதும் கவலைப் படமாட்டார்கள்

    அடுத்ததாக தொழிற்சங்கங்கள். இவர்களுடைய தலையாய கடமையே  வேலையே செய்யாமல் இருப்பது எப்படி என்பது தான். பேச்சுவார்த்தை என்று கூப்பிட்டால் இவர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே போரட்டம் நடந்த நாட்களையும் வேலைசெய்த நாட்களாக கருதி சம்பளம் அளிக்க வேண்டும் என்பது தான். சரி அந்த வேலை செய்யாத நாட்களில் ஏற்பட்ட இழப்புக்களை கூடுதல் நேரம் வேலை செய்து சரி செய்து கொடுப்பார்களா? என்றால் அதுதான் இல்லை.

  இவ்வாறு  அவரவர்கள் அவரவர் போக்கில் சென்றால் பாதிக்கப்படுவது யார் என்று பார்த்தால் திருவாளர் பொதுஜனம் தான். போரட்டம் என்ற பெயரில் கூத்தடிக்கும் போது அவசரமாக ஆஸ்பத்திக்குக் கூட செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதையெல்லாம் பற்றி இவர்கள் சிந்திப்பதேயில்லை.

    மத்திய அரசோ, மாநில அரசு மற்றும் தொழிற்சங்கங்களை கலந்தாலோசிகாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கிறது.  தொழிற்சங்கங்களோ இது தான் சாக்கு என்று வேலை நிறுத்தம் செய்கிறது.  இவர்களைப் பொறுத்தவரை பொதுமக்கள் வெறும் கிள்ளுக் கீரைகளாகவே தோன்றுகின்றனர் போலும். காலம் ஒருநாள் நிச்சயம் பதில் சொல்லும்.

Tuesday, July 2, 2013

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 'ஓ' போடு

  சப்தமில்லாமல் ஒரு சாதனையை நேற்று இரவு 11.45 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துள்ளனர். உலகளவில் வளர்ச்சியடைந்த சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே வைத்துள்ள இந்த நேவிகேஷன் செயற்கைக் கோளை இந்தியாவும் வெற்றிகரமாக அனுப்பி அந் நாடுகளின் வரிசையில் சேர்ந்துள்ளது.

   இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இந்த செயற்கைக்கோளை அனுப்பிய நாடுகள் அனைத்தும் உலகளவில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளாகும். இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியும் அவர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் செயலாகும். இதனால் அவர்கள் நம் நாட்டிற்கு பல்வேறுவிதமாக மறைமுக தொந்தரவுகள் கொடுக்கக் கூடும். நமது அரசியல்வாதிகள் பற்றி கேட்கவே வேண்டாம். அந்நிய நாடுகள் காசு கொடுக்கும் என்றால் எதற்கும் தயாராகவே இருப்பார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் விஞ்ஞானி நம்பி நாராயணன் விஷயத்தில் நமது அரசியல்வாதிகளின் செயல்பாடு.

    இவையெல்லாம் மீறி நமது விஞ்ஞானிகள் ஒவ்வொரு செயற்கைக்கோளையும் வெற்றிகரமாக செலுத்தும் போதும் நாம் இந்தியன் என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது.ஆட்சியாளர்களே உங்களிடம் இந்த நாடு "ராமர் பிள்ளை" களை ஆதரிக்கச் சொல்லவில்லை. மாறாக  இந்த நாட்டிற்காகவே அர்ப்பணித்து, அந்நிய நாடுகள் கொடுக்கும் மிகப் பெரிய தொகையை சம்பளமாக பெறமறுத்து இரவு பகலாக ராதாகிருஷ்ணன் தலைமையில் உழைக்கும் "இஸ்ரோ"  விஞ்ஞானிகளை  எந்தவிதமான கருத்து வேறுபாட்டிற்கும் இடமின்றி ஆதரியுங்கள்.

    இந்த பொன்னான தருணத்தில் செயற்கரிய சாதனகளைச் செய்துவிட்டு அமைதியாக அடுத்தவேலையைப் பார்க்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஒரு 
'ஓ' போடுவோம்.





Monday, July 1, 2013

"ரயில்வே" - ஏன் இந்த கொலைவெறி

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வேயிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி ரயிலின் கழிவறைகள் சுத்தமாக இல்லையெனின் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு குறைகளைச் சொல்லலாம் என்பதாகும்.  ஆனால் ரயில்வே அதை காது கொடுத்துக் கேட்டமாதிரி தெரியவில்லை.

  இவையல்லாம் ஒருபுறம் இருக்க புதிய ரயில்கள் என்பது ரயில்வே அமைச்சரின் சொந்த மாநிலத்துக்குத்தான் என்பது எழுதப்படாத  விதி. அது நிதிஷ் குமாராக இருந்தாலும் சரி லல்லுவாக இருந்தாலும் சரி, மமதாவாக  இருந்தாலும் சரி. அதில் மட்டும் பேதமே கிடையாது. தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கியமாக செங்கோட்டை பகுதிக்கு  ஒரே ஒரு ரயில் தான் உள்ளது. பல முறை பல விதமாக கேட்டுப்பார்த்தும் கூடுதல் ரயில் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது

   மத்திய ரயில்வே மந்திரிகளோ "பெருமைக்கு எருமை ஓட்டும் விதமாக" பட்ஜெட்டில் புதிது புதிதாக ரயில்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.

   சரி பட்ஜெட்டில் அறிவித்தபடி ரயில்களாவது உடன் ஒடத் தொடங்குகின்றனவா என்றால் அதுவும் இல்லை. காரணம் கேட்டால் பெட்டிகள் இல்லை, இஞ்சின்கள் இல்லை என்று நொண்டிச் சாக்கு வேறு.

   பயணசீட்டே எடுக்காமல் அதிகம் பேர் பயணிக்கும் மாநிலம் பீகார். அம்மாநிலத்திற்கு அளவுக்கு  அதிகமான ரயில்கள். டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது பாபம் என்று எண்ணும் தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மறுப்பு. வாக்கு வங்கி என்பதை மனதில் வைத்து வாக்கில்லாமல் ரயில்களை அறிவிக்கும் ரயில்வே மந்திரிகளே இந்தியா என்பது உங்களின் சொந்தமாநிலம் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களும் உள்ளடக்கியது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நமது மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களே உங்களை மக்கள் தேர்ந்தெடுப்பது என்பது பார்லிமெண்ட் காண்டீனில் சாப்பிட்டு விட்டு வருவதற்காக அல்ல. மக்களின் பிரதிநிதியாக பேசுவதற்காக எனபதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

Thursday, June 27, 2013

sudhakumaar: தமிழ் சினிமா ஒர் பார்வை

sudhakumaar: தமிழ் சினிமா ஒர் பார்வை:  தலைப்பைப் பார்த்துவிட்டு எல்லோரும் கூறுவதைத்தானே நீயும் எழுதப் போகிறாய் என்று தயவு செய்து  எண்ணவேண்டாம். முழுவதைய்ம் படித்து விட்டு உங்கள்...

தமிழ் சினிமா ஒர் பார்வை

 தலைப்பைப் பார்த்துவிட்டு எல்லோரும் கூறுவதைத்தானே நீயும் எழுதப் போகிறாய் என்று தயவு செய்து  எண்ணவேண்டாம். முழுவதைய்ம் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

   தமிழ் கூறும் நல்லுலகிற்கு  இன்றைய ஜீவனம் நல்ல படியாக முடிகிறதோ இல்லையோ தங்களின் திரையுலக நாயகர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரார்த்தனை. அவ்வாறு இவர்கள் காலம்  கழிக்கையில் அவ்ர்களுக்கு தனது ரசிகர்களைப் பற்றிய அபிப்ப்ராயம் என்ன?

   பொதுவாக தங்கள் படம் திரையிடப்படும் நாளிலிருந்து  (இப்போது வெற்றிகரமான ஒன்றாவது வாரம்)100வது, 150.....வரை இவர்களின் வெற்றிக்கு ரசிகர்கள் அரும் பாடு படுகிறார்கள். ஆனால் இந்த  நாயக நாயகிகளோ தங்களின் வெற்றிக்கு உழைத்த இந்த ரசிகர்களை பிறந்த நாள் அன்று காத்துக்கிடந்தால் கூட சந்திப்பது இல்லை. அல்லது வரவேண்டாம் என்று அறிக்கை விட்டுவிட்டு எங்கேனும் அமைதியாக குடும்பத்துடன் கழிக்கின்றனர்.

    சரி வெளிவரும் படங்களில் எத்தனைப் படம் நல்ல கதையம்சத்துடன் வெளிவருகிறது? பெரும்பாலும் ஒரேகதை. ஒன்று காதலி பணக்காரியாக இருப்பாள் காதலன் ஏழையாக இருந்து காதலியின் தந்தையால் அவமானபடுத்தப்பட்டு ஒரே பாடலில் பணக்காரனாகி பழிதீர்ப்பான். அல்லது காதலி ஏழையாக இருந்து  பணக்காரகாதலனை கைபிடிப்பதாக சபதம் செய்து வெற்றியும் பெருவாள். இதற்கிடையில் டூயட், தீ மிதி எல்லாம் உண்டு.
http://www.valaipookkal.com/
  இந்த மாதிரி கதையம்சம் உள்ள எத்தனைப் படங்கள் வெற்றி பெறும்? பெரும்பாலும்  தோல்விதான். சரி இவர்கள் நல்ல விஷயங்களாவது சொல்லித்தருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. குடிப்பதற்கும், சிகரட் பிடிப்பதற்கும் கொள்ளையை நூதனமாக செய்வதற்கும் தான் சொல்லித்தருகிறார்கள். மது, சிகரெட் போன்றவை உடல் நலத்திற்கு கேடு என்று வாசகம் எழுதிக் காண்பித்தால் மட்டும் போதாது.  கண்டிப்பாக அக்காட்சிகளுக்கு  சென்சாரில் தடைவிதிக்கவேண்டும். கண்டிப்பாக பாடல் காட்சிகளில் உடைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வரிகள் இரட்டை அர்த்தம் இல்லாமை இருக்க வேண்டும். வசனங்களை MUTE செய்யக்கூடாது.  
இவையெல்லாம் இந்தியாவில் உள்ள எத்தனையோ மக்களின் கனவு. 

  ஆனால் மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி இப்படி கேவலமான படங்களை தயாரித்து அதை நாமும் பார்த்துத் தொலைத்தால் நமது கனவு என்றுமே கனவு தான்

Tuesday, June 25, 2013

முன்னோர்கள் முட்டாள்களா?-- பகுத்தறிவாளர்களிடம் ஒரு கேள்வி.

http://blog.maatru.net/    கேதார்நாத் கோவிலைச் சுற்றியுள்ள அத்தனை இடங்களும் முற்றிலுமாக அழிந்திருக்க கோவில் அப்படியிருப்பது வியப்பிற்குரிய விஷயம். புராணங்களின் அடிப்படையில் யுக யுகமாக இருந்துவரும் இக் கோவில் இதைப் போன்று பலமுறை விபத்துக்களை சந்தித்துள்ளது.

  இன்று இருக்கும் வசதிகள் போல் நம் முன்னோர்கள் காலத்தில் இல்லை. சாட்டிலைட்டோ அல்லது மிகப் பெரிய கிரேனோ அல்லது பொக்கலைங்களோ அன்று இல்லை. ஆனாலும் அவர்கள் கட்டிய கோவில்கள்  இன்றுவரை அற்புதமாக காலம் கடந்தும் நம் முன்னோர்களின் வரலாற்றை பறைசாற்றி வ்ருகிறது.

  ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் இன்று நம் மக்கள்,முன்னோர்களின் செயலை இகழ்ந்து பேசுவதும், அவர்கள்  சம்பிரதாயம் என்ற பெயரில் உள்ளவற்றை மூட நம்பிக்கை என்று பேசி வருவதும் வருத்ததிற்குரிய செயல். காற்றின் திசையயும் அது வந்து போகும் நிலையை கணக்கிடுவதற்கு "வாஸ்து" என்று பெயரிட்டனர். இருக்கும் இடத்தைப் பொருத்து மனையடி சாஸ்திரமானாலும் சரி வாஸ்துவானாலும் சரி அமைக்கப்பட்டிருக்கும்.

  இதை மூட நம்பிக்கை என்று கூறுபவர்கள் நமது தேசத்திற்கே ஒத்துவராத சீன வாஸ்து என்ற பெயரில் வாயில் நுழையாத "சாங் -சூங்" களை விற்பனை செய்கின்றனர். இவையெல்லாம் சரி இவர்களின் மொத்த புத்திசாலி -தனத்தையும் காட்டிக் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் பலமாக இருக்கின்றனவா? என்பது ஒரு மிகப் பெரிய கேள்வி. அந்தக் காலத்தில் உப்புக் காற்றிலிருந்து காப்பாற்ற எந்தவிதமான பெயிண்டுகளும் இல்லை. ஆனால் கட்டிடம் துளிக் கூட சீர் கெடவில்லை.  இன்று குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பெயிண்ட்கள் அடித்தும் பராமரித்தும் வந்தாலும் அவை புயல், மழை, வெயிலுக்குத் தாங்குவதில்லை.

  பகுத்தறிவு என்பது என்ன என்று தெரியாமலேயே தங்களை பகுத்தறிவு வாதிகளாக காட்டிக் கொள்பவர்களே அடுத்தவர்களின் நம்பிக்கையை  இகழ்ந்து பேசுவதும் பகுத்தறிவற்ற செயல் என்பதை புரிந்து கொள்ளுங்க்ள். முன்னோர்கள் யாவரும் முட்டாள் அல்ல. எந்த ஒரு செயலை அவர்கள் செய்யும் போதும் அந்த செயலாகவே மாறிச் செய்தனர். ஒவ்வொரு கோயிலையும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே கட்டியள்ளனர். அதில் எந்த ஒரு சுயநலமுமின்றி எதிர்கால மக்களின் நலன்களையும் சேர்த்து உருவாக்கியுள்ளனர்.

   எனவே பகுத்தறிவு வாதிகளே இனியாவது எதையும் சரியாக புரிந்து கொண்டு பேசுங்கள். இல்லையெனின் நீங்களும் இகழப்படும் காலம் வெகுத்தூரத்தில் இல்லை.

"தார்மீகமா"? "தலைகனமா"?

 உத்தரகண்டில் இயற்கை ஒரு ருத்ர தாண்டவம் ஆடியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஆன்மீக அன்பர்கள் தரிசனத்திற்கு  வந்து பரிதவித்து நிற்கின்றனர். இதில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந் நிலையில் ராணுவம் பெரும் முயற்சி எடுத்து மக்களைக் காப்பற்றி வருகிறது.

    இதற்கிடையில் எந்த ஒரு முதல்வரும் செய்யாத ஒரு காரியத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்துள்ளார். துணிச்சலாக களத்தில் இறங்கி அவர்    15000 பேரைக் காப்பாற்றியுள்ளார். அதுவல்லாது மேலும் உதவி வேண்டுமா என்று கட்சி பேதமின்றி காங்கிரஸ் முதல்வரை சந்தித்துக் கேட்டுள்ளார்.

  அதை நாகரிகமாக தவிர்த்துள்ளார் அம்மாநில முதல்வர். இத்துடன் நிறுத்தியிருகலாம் காங்கிரஸ். மேலும் மோடியை விமர்சித்து இருப்பது  காங்கிரஸ்காரர்களின் மட்டமான புத்தியையே காட்டுகிறது. எல்லா மாநில மக்களும் கட்சி பேதமின்றி உதவியள்ளனர். திகார் சிறை கைதிகள் கூட தங்களது பங்களிப்பாக ரூ.10 லட்சம் கொடுத்து உதவியள்ளனர்.

    ஆனால் ரூபாய் மட்டுமே உதவி ஆகிவிடாது என்பதை உணர்ந்த மோடி மனித உதவி முதல்  எந்திர உதவி வரை எல்லாவிதமான உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளதற்கு அரசியல் சாயம் பூச காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்.
 
     ";ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி " என்று ஒற்றுமைக்கு உதாரணமாக நம் நாடு திகழ்கிறது. அது கிரிகெட்டாக இருந்தாலும் சரி கார்கில் போராக இருந்தாலும் சரி.  ஆனால் காங்கிரஸைப் பொறுத்தவரை கட்சியையே இத்தாலியிடம் அடகு வைத்தப்பின் "அந்நியர் வந்து புகல்வதே நீதி" என்பவர்களிடம் இந் நாட்டுமக்கள்  என்னவிதமான மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்? 

Sunday, June 23, 2013

"மாற்றவேண்டுமா பள்ளிகளின் வேலை நேரத்தை"

 இன்று காலையில் ஒரு செய்தி உலா வந்தது. அதன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் நாளை முதல் மாற்றப்பட்ட நேரத்தில் இயங்கும்  என்பது தான். ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே அப்படி ஒன்றும் இல்லை என்று பள்ளிக் கல்வி இயக்குநகரகம் செய்தி வெளியிட்டது.

   ந்டைமுறையில் இந்த மாற்றம் எப்படி இருந்தால் பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பார்க்கலாம்.

   1. கர்நாடகா, மகாராஷ்டிரா,போன்ற மாநிலங்களில் உள்ளது போல் shift system ஐ நடைமுறைப் படுத்தலாம். இதன்படி சிறு குழந்தைகள் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை  பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதால் சற்று ஆர்வமாக செல்லும்

2. இரண்டு பிரிவாக செல்லும் போது பேருந்துகளில் இட நெருக்கடி குறையும்.

3. தாய்மார்கள் தங்கள் வீட்டு வேலைகளை சற்று நிதானமாகச் செய்யமுடியும். கணவன், மற்றும் குழந்தைகள் என இருவரையும் ஒருசேர கவனிக்க வேண்டியது இல்லை.

4. 7 மணிமுதல் 2 மணி வரை என்று மாற்றப்பட்டால் பெரிய அளவில்  குழந்தைகளுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ பயன் தராது. 7 மணி பள்ளிக்கு கிராமப்புற மாணவர்கள் 5 மணிக்கே தயாராக வேண்டும்.

    இது பள்ளிகளில் பாடங்களை கவனிப்பதற்கு பதிலாக தூக்கத்தையே வரவழைக்கும். இதற்கு தற்பொழுதுள்ள நேர விதிகளே எளிதானதாக இருக்கும்.

   வீட்டுப் பாடங்களைக் கொடுக்காமல் இருப்பதன் மூலம் வீட்டிற்கு வந்து அன்று நடந்த பாடங்களை அன்றே படிப்பது என்பது எளிதாக இருக்கும்.
special class என்ற பெயரில் காலை 7மணிமுதல் இரவு 9 மணி வரை 12 வகுப்பு, 10 வகுப்பு மாணவ மாணவியர்களை வதைப்பதை தடுத்தல் , எல்லா சனிக்கிழமை களும் கண்டிப்பான விடுமுறை போன்றவற்றை நடைமுறை படுத்துவதன் மூலமும் குழந்தைகள் வேறு ஏதாவது கற்றுக் கொள்ளமுடியும்.

   இதையெல்லாம் விடுத்து  நேரத்தை முன் கூட்டி வைப்பதால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக தூக்க கலக்கதில் குழந்தை பஸ்ஸிலிருந்து  தவறி விழுந்தது. என்ற செய்தியையே அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். அரசு சிந்திக்குமா?

Friday, June 21, 2013

எது புலனாய்வு- ஒரு பார்வை

 இன்றைய நாட்களில் புலனாய்வு பத்திரிகை (அ) exclusive coverage  என்ற பெயரில் நடக்கும் கூத்து காணக் கொள்ளாதது. இவர்கள் புலனாய்வு என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கும் கேள்விகள் காதில் ரத்தம் வரச் செய்கின்றன. இதிலும் குறிப்பாக பாலியல் வன் கொடுமைக்கு ஆளானவர்களை இவர்கள் பேட்டி காணும் விதம் அந்த பாதிக்கப்பட்டவர்களை மேலும் புண்ணாக்கவே செய்யுமே தவிர ஆறுதல் அளிக்காது.

  இவர்களுக்கு அடுத்த படியாக பத்திரிகையாளர்களின் கடுமையான பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாபவர்கள் காவல் துறையினர்.. இவர்களின் கவர்ஸ்டோரிக்காகவும், exclusive , சிறப்புச் செய்திகளுக்காகவும் , காவல் துறையினரை கிட்டத்தட்ட தாக்கவும், ஆத்திரம் மூட்டும் வார்த்தைகளை உபயோகிப்பதும் எந்தவகை "புலனாய்வு" என்பது தெரியவில்லை. மேலும் இவர்களை காவல்துறையினர்  ஒரு வார்த்தை கூறினால் போதும் உடனடியாக காவல் துறையின் அராஜகம் ஒழிக என்று கூக்குரல் எழுப்பி ஆவேசப்படுகின்றனர்.

  பத்திரிகை நண்பர்களே உங்கள் வீட்டில் ஏதேனும் கொலை கொள்ளை அல்லது உங்கள் சகோதரிக்கோ அல்லது மகளுக்கோ பாலியல் பலாத்காரத் துயரம் ஏற்பட்டால் நீங்கள் இப்படி கூலாக, துருவி துருவிக் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? சற்று யோசியுங்கள். பட்டையத்தை எடுத்தவன் பட்டையத்தால் சாவான் என்பது பழமொழி. நீங்கள் புலனாய்வு என்ற பட்டையத்தை எடுத்துள்ளீர்கள்  அந்தப் பட்டையம் உங்களை பாதிக்காவிட்டாலும், உங்கள் சந்ததிகளை பாதிக்கும். எமனாக மாறிவிடாமல் காத்துக் கொள்ளுங்கள்

Thursday, June 20, 2013

விலைவாசி ஏற்றம் - தமிழகத்தின் இன்றைய நிலை.

   சமீபத்தில் கேரளா சுற்றுப்பயணம் செல்ல நேர்ந்தது.  அங்கு நிலவும் விலைவாசியை உற்றுப்பார்க்கும் போது தமிழகத்தில் நிலவும் விலை வாசி அதிகமோ என்று தோன்றியது. இத்தனைக்கும் தமிழகத்திலிருந்து தான் எல்லாப் பொருட்களும் தமிழ்நாட்டிலிருந்து தான் செல்லவேண்டும்.

  ஒரு unlimited meals Rs.60/-க்கு தயிருடன் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்?  விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வு தான் காரணம் என் சொல்லுகின்றனர் ஆட்சியாளர்கள். இந்த விலை உயர்வு இந்தியா முழுமைக்கும் தான். 

  ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருக பெருக விலைவாசி உயருவது தவிர்க்கமுடியாத சக்தியாகிறது. அந் நிறுவனங்கள் தங்களின் வேலை தடையற நடக்க சம்பளத்தை அள்ளிக் கொடுக்கிறது. இதன் விளைவு விலைவாசி உயர்வும், அந் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மன அழுத்தமும் தான். 

   தீப்பெட்டி, பட்டாசு, பஞ்சாலை, மற்றும் சாயப் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் வாழ்க்கை நிலை வேறு மாதிரியாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலி அடிப்படையிலேயே உள்ளனர். அவர்களுக்கு அதிக சம்பளம், இலவச போக்குவரத்து, இலவசமாக தேநீர் என்று ஆசைகாட்டப் படுகிறது. பெரும்பாலன நிறுவனங்கள்  p.f.,  E.S.I.C போன்ற வசதிகளை வழங்குவதில்லை.  அவர்கள் நோய்வாய்பட்டலோ, அல்லது அகாலமாக இறக்க நேரிட்டாலோ அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை.
   
   இருந்தும் இவைகளை நாடி மக்கள் செல்வதற்கு காரணம் விலைவாசி உயர்வும், ஒருசாண் வயிறும் தான். உணவுப்பொருட்கள் விலை கட்டுக்குள் வந்தாலே விலை வாசி கட்டுப்படுத்தப்படும்.  விவசாயநிலங்களை ப்ளாட்டாக மாற்ற தடை விதிக்கவேண்டும், விளைச்சலை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். உடனடி பணம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும் இந்திய பெரிய நிறுவனங்கள் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் கொள்ளையை தடுக்கவேண்டும்.

   இது போன்ற சீர்திருத்தங்கள் எதுவும் செய்யாமல் வெறுமனே ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொண்டிருந்தால்  விவசாயத்தை ஓராயிரம் நம்மாழ்வார்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது. இதனால் விலைவாசி உயர்வை கட்டுக்கொள் கொண்டுவருவது என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்

Sunday, June 16, 2013

FATHER'S DAY - இது தேவையா?

 இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பத்து என்னவென்றால் இதுவரை நாம் நம் தந்தையை மறந்திருந்தோம். இன்று தந்தையர் தினம் கொண்டாடி "நம்முடன் இருக்கின்ற " தந்தையை நினைவு கூர்ந்தோம். வாழ்க.

  நம்நாட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் குழந்தைகள் ஒருகுறிப்பிட்ட பருவம் வரை பெற்றோர்களோடே இருப்பார்கள் எனவே இது போன்ற போலியான ஒரு நாள் கொண்டாட வேண்டுமா? இதை நான் கூறுவதால்  FACEBOOK, மற்றும் TWITTER ல் இந்ததினத்தைக் கொண்டாடும் அன்பர்களின் கோபத்திற்கும், சாபத்திற்கும்  ஆளாக நேரிடலாம். எங்களது அன்பை குறை கூறுகிறாயா? என்று கேட்கலாம்.
 
     நான் உங்களின் அன்பைக் குறை கூறவில்லை. மாறாக உண்மையான அன்பு இந்த மாதிரி ஆராவாரம் எதுவும் செய்யாது  தக்க சமயத்தில் வெளிப்படுத்தும். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய " இந்த பாரத பொன்நாட்டிற்குத் தேவையா  FATHER'S DAY யும்  MOTHER'S DAY யும். சிந்தியுங்கள். பெற்றோர்களே நீங்களே உங்கள் குழந்தைகளை அந்நியப் படுத்தாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியும்.

Monday, June 10, 2013

அத்வானி என்றெரு local தலைவர்

அத்வானி ராஜினாமா. இன்று ஊடகங்களுக்கு நல்ல விருந்து. கோவா கூட்டத்தைப் புறக்கணித்ததிலிருந்தே பல்வேறு ஹேஷ்யங்கள் நிலவி வந்த நிலையில் அத்வானி தன்னாலான ஒரு தொண்டை செய்துள்ளார்.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பா ஜ க ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதைப் பற்றி அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சந்தர்ப்பம்   என்பது மோடி ரூபத்தில் வந்துள்ளது. அதற்கு  அத்வானியே ஆப்பு வைத்துவிடுவார் போல உள்ளது.

நீங்கள் துணைப்  பிரதமராக இருந்தபோது செய்தது என்ன? இன்றும் உங்கள் மேல் இந்தியர்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளது.   ஆனால் நீங்கள் காப்பாற்றிக் கொள்வீர்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.  நாட்டையே அடகு வைக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உங்களை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில் நீங்களே உங்கள் தலையிலும் கட்சி தலையிலும் மண்ணை வாறித் தூற்றாதீர்கள். மூத்த தலைவர்கள் இளையவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் திறம்பட ஆட்சி செய்ய ஆலோசனை வழங்குங்கள்  அதை விடுத்து நானே தலைவன். நான் இல்லையென்றால் ஆட்சியே அமைக்காவிட்டலும் சரி என்று விபரிதமுடிவு எடுக்காத்தீர்கள். நல் ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் இப்படி செய்து மாநில கட்சி தலைவர்கள் போல் உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதிர்கள். 

    உண்மையான இந்தியக் குடிமக்களின்  கருத்துக்கு மதிப்புகொடுப்பீர்கள் என அவர்கள் நம்புகிறார்கள். ஏமாற்றிவிடாதீர்கள்.

Saturday, June 8, 2013

சூதாடி விளையாடு பாப்பா

 பாரதி இன்று இருந்தால் "ஓடி விளையாடு பாப்பா" என்பத்ற்கு பதிலாக் "சூதாடி கிரிகெட் விளையாடு பாப்பா" என்று பாடியிருக்கலாம்.நெரிசல் மிகுந்த இந்நாட்களில் விளையாட்டு என்பதே அரிதாகிக் கொண்டு வருகிறது. இந் நிலையில் இந்த தேசத்தின் தலை சிறந்த விளையாட்டாகக் கருதப் படுவது கிரிக்கெட் மட்டுமே.  கிரிக்கெட் என்பது ஆங்கிலேயர்கள் வெயிலின் சுகத்தை அனுபவிப்பதற்காக உண்டான விளையாட்டு. இந்நிலையில் 42டிகிரி வெயில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு ஏற்றது தானா? 

 அநேகமாக இப்பொழுதுள்ள பெரும்பாலான குழந்தைகள் கிரிக்கெட்டே நமது தேசிய விளையாட்டு என்று எண்ணும் அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருகிறது. சரி 100 கோடி மக்கள் தொகை உள்ள நம்நாட்டில் மற்ற விளையாட்டு விளையாட ஆட்கள் இல்லையா என்றால் திறமை சாலிகள் பலர் இருந்தும் அவர்களுக்கு சரியான அங்கிகாரமும், ஸ்பான்சர்களும் கிடைப்பது இல்லை. மேலும் இதில் அரசியல் குறுக்கீடு வேறு.

  இந்தியர்கள் மற்ற விளையாட்டுக்களை அங்கீகரிக்கவில்லையா என்றால் அது வும் இல்லை. ஒலிம்பிகில் குறைந்த அளவு பதக்கங்கள் தான் நமது தேசம் பெற்றது. ஆனால் அந்தவீரர்களை நம் தேசம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. பலர் வெகுநேரம் கண்விழித்து பல விளையாட்டுக்களை கண்டு களித்தனர். 

   ஒரு சச்சினிக்கும் தோனிக்கும் கிடைக்கும் அளவிற்கு விளம்பரங்கள் சாய்னாவிற்கோ அல்லது விஸ்வநாதன் ஆனந்திற்கோ கிடைக்கவில்லை ஏன்? அதிலும் இவர்கள் உலக தரவரிசையில் முதலிடங்களில் இருப்பவர்கள்.  பெப்சியும் கோக்கும்  கிரிக்கெட் வீரர்க்ளை ஊக்குவிக்கும் அளவிற்கு மற்றவிளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காதது ஏன்? ஜெயிக்கின்ற குதிரை மீதுதான் பணத்தை கட்டவேண்டும் என்பார்கள். அதுபோல நம் நாட்டில் ஜெயிக்கின்ற குதிரையாக் கிரிக்கெட் இருக்கிறது. 

    இந்நிலைமாற அரசாங்கம் வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் போதே கிரிக்கெட் அல்லாத ஏதாவது ஒருவிளையாட்டை கண்டிப்பாக ஸ்பான்சர் செய்யவேண்டும் என்று வற்புறுத்தலாம். அவ்வாறு செய்தால் பல்வேறு திறமையான வீரர்கள் இந்த நாட்டிற்குக் கிடைப்பார்கள். 

   அரசியல்வாதிகள் தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பதக்கப் பட்டியல் நிரம்பவேண்டும் என்பதையும் மனதில் கொள்ளட்டும் அவ்வாறு செய்தால் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் தலை நிமிர்வதோடு , சூதாட்டம் போன்ற ஈனத்தனமான சர்ச்சையில் சிக்கி நமது மானம் பறிபோகாமல் காப்பாற்றப்படும் என்பது திண்ணம்.

Thursday, June 6, 2013

காமெடி சானல்களும், காம்பியர்களின் அட்டகாசமும்

கடந்த 05/06/2013 அன்று இரவு ஆதித்யா சானலில் double galatta என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் வழக்கம்போல தம் கட்டி பேசிக்கொண்டிருந்த இருவர் காமெடி என்ற பெயரில் கூத்தடித்தது அருவருக்கத்தக்கதாக இருந்தது.

   ஒரு மாணவன் பரிட்சை எழுத கஷ்டப்படுவது போலவும் அதற்கு ஆசிரியர் உதவுவது போலவும்,பதிலுதவியாக ஆசிரியையிடம் தாம் கூறுவதை அப்படியே கூறவேண்டும் என்று கேட்பது போல போய்க் கொண்டிருந்தது.

  அந்த வசனங்களை சகிக்க முடியாமல் வேறு சானல் மாற்றிவிட்டேன். இதை எத்தனை இரண்டுகெட்டான் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? எத்தனை ஆசிரியரகள், ஆசிரியைகள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? அவர்கள் மனம் என்ன பாடுபடும்? குழந்தைகளுக்கு ஆசிரியர், ஆசிரியைகள் மீது  என்னவிதமான அபிப்பிராயம் ஏற்படும்?

  ஏற்கனவே நெடுந்தொடர்கள் என்ற பெயரில் பல குடும்பங்களுக்குள் குழப்பத்தை விளைவித்துக்கொண்டிருக்கின்றனர். தனியார் தொலைக்காட்சிகளே உங்கள் TRP RATING என்றமாயைக்காக வரம்பு மீறாதீர்கள். யாரை வேண்டுமானாலும் புண்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். அது ஒரு நாள் பஸ்மாசுரன் கதை போல உங்களுக்கேத் திரும்பும்

Tuesday, June 4, 2013

"யோகா" ஒரு பார்வை

   இன்றைய நாட்களில் யோகா வகுப்புச் செல்கிறேன் என்று சொல்வது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. சரி யோகா என்பது என்ன? அதன் பயன் என்ன? என்பது எத்தனை பேருக்கு சரியாகத் தெரிந்திருக்கும் என்பது ஒரு கேள்விகுரிய ஒன்று.

   யோகா என்பது ஒரு எளிய வகை மூச்சுப்பயிற்சி. அவ்வளவுதான். இந்த மூச்சுப்பயிற்சியை முறையாகச் செய்யும்போது ஏற்படும் உள்நிலை மாற்றமே பல வேறு நிகழ்வுகளிலிருந்து நம்மை தற்காக்கிறது.

   ஆனால் உண்மையில் இன்று இந்த வகுப்புகளுக்குச் செல்லுவோர் இருவகையான மனநிலையில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தாங்கள் யோகா பயிற்சி செய்பவர்கள் என்று சொன்னாலே எதிரில் இருப்பவர்கள் தங்கள் காலில் விழுந்து விபூதி வாங்கிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் தங்கள் நிலையைப் ப்ற்றி அறியாமலும், யோகாவின் தத்துவம் என்ன என்பதைப்பற்றி அறியாமலும் இருக்கின்றனர்.

    மற்றொரு வகையினர் யோகா செய்தாலே சாமியாரகப் போய்விடுவார்கள் குடும்பத்தைத் துறந்து தவிக்கவிட்டுச் செல்வார்கள் என்று தவறாக கணக்குப் போடுகிறார்கள். இவை இரண்டுமே தவறு. சரியான படி யோகாவை செய்தால் மன அழுத்தம் மற்றும் பல வகையான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

  பொதுவாக மன அழுத்ததிலிருந்து விடுபட்டாலே ரத்தக்கொதிப்பு ,சர்க்கரை நோய் போன்றவற்றிலிருந்து விடுபட முடியும்.மனம் சீராக இயங்க சுவாசம் முக்கியம். இதைத்தான் இந்தவகுப்புக்களில் பயிற்றுவிக்கின்றனர். இதைவிடுத்து இந்தவகுப்புகளுக்குச் சென்ற அடுத்தநாளே தம்மை சத்குருவாகவும் ,யோகிராஜாவாகவும் நினைத்துக் கொண்டால் அது நமது மடத்தனம். இந்தப்பயிற்சிகள்யாவும் நம் அன்றாட வாழ்வில் இருந்தது தான். அந்நிய மோகத்தில் இவற்றை நாம் விட்டுவிட்டோம்.

  ஒரு முறை "துக்ளக்"ஆசிரியர் "சோ"விடம் உங்களுக்கு தியானம் தெரியுமா? என்று கேட்டதற்கு, எனக்குத் தெரிந்த தியானம் :மத்தியானம்" தான் என்றார். அதுபோல யோகா என்னும் பயிற்சியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளாமல், அதை புகழ்வதோ அல்லது தூற்றுவதோ, அதைகற்றுதரும் குருமார்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கட்சி கட்டிக் கொண்டு பேசுவதோ வெறும் காட்டுக்கூச்சலாகத்தான் இருக்கும். இதில் யாதொரு பயனும் இருக்காது.

Monday, June 3, 2013

கம்ப்யூட்டர் புலியா உங்கள் குழந்தை

 இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் என்பது மிகவும் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. இதில் குழந்தைகள் மிகவும் ஆர்வமாகவும் வேகமாக புரிந்து கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். இவையெல்லாம் சரி உங்கள் குழந்தைகளை இவை எவ்வளவு தூரம் அடிமையாக்கி வைக்கின்றன என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

    போக்குவரத்தும் ஜனசந்தடியும் அதிகம் உள்ள இந்நாட்களில் குழந்தைகள் கம்ப்யுட்டரிலேயே படித்து, விளையாட்டி, வீரம் காட்டி, கம்ப்யூட்டரிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். இது அவர்களை அடிப்படையிலேயே பொறுமையற்றவர்களாக மாற்றுகின்றது.

   சாதாரண ஒரு கோவிலில் சிறப்பு தரிசன வரிசையில் கூட நிற்ப்பதற்குப் பொறுமையின்றி online ல் ticket வாங்கமுடியாதா என்று கேட்கும் நிலை உள்ளது. இத்ற்கு யார் காரணம்? பெற்றோராகிய நாம் தான். குழந்தை ஒரு பொதுவிடத்தில் 4பேர் முன்பாக இது esc key.இது alt key என்று சொல்லும்போது அக மகிழ்ந்து நிற்பதே இதற்குக் காரணம். பின்நாட்களில் இது சமுகவலைத்தளங்களில் உள்ள தீய சக்திகளின் தொடர்புக்கு காரணமாகிறது.

 குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரை கற்றுக்கொடுங்கள் அத்துடன் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொடுங்கள் வீட்டின் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகளுடன் நிறையப் பேசுங்கள். குழந்தைகளை சிறு சிறு வேலைகளைச் செய்யச் சொல்லுங்கள்.மனதளவில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க இது உதவும்.

  கம்ப்யூட்டர் மட்டுமே உலகமல்ல. நமது வாழ்க்கையில் ஒரு பகுதி. அவ்வளவுதான்.உங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டரில் புலி என்றால் கம்ப்யூட்டர் என்னும் கூண்டில் தான் அடைபட்டுகிடக்கவேண்டியிருக்கும். வெளி உலக அனுபவம் என்ற சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது.

   

Friday, May 31, 2013

அரசுத் தேர்வு முடிவுகளும், ஊடகங்களின் உள்ளாடலும்

  சமீபகாலமாக அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் அந்தத் தேர்வை எழுதிய மாணவர்களோ அவர்களது பெற்றோர்களோ அல்லது அவர்களது பள்ளிகளோ டென்ஷனாக இருப்பார்கள் என்று நாம் நினைத்தால் நாம் வடிகட்டின முட்டாள்.  மிகுந்த பரபரப்போடும் பதைபதைப்போடும் காணப்படுபவர்கள் மீடியாக்காரர்களே.

    இவர்கள் பரபரப்புக்கு என்ன காரணம்?  இன்னும் 2 நாட்களுக்கு செய்தி என்ற பெயரில்  ஒரு விருந்து கிடைத்துவிட்டது. மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர் முதல் மாவட்டம், வட்டம் , ஒன்றியம், தெரு வரை இது தொடர்கிறது.

  முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கொடுக்கும் பேட்டி இன்னும் கொடுமை. இனிப்பு என்ற பெயரில் லட்டுகளை மாணவர்களின் பெற்றோர்கள் அந்த மாணவனுக்கும் மாணவன் அவனது பெற்றோர்களுக்கும்  திணிப்பதைப் பார்த்தால் இனி லட்டே சாப்பிடத்தோன்றாத அளவிற்கு close-up ஷாட் வேறு.

   இந்த வெற்றிச் செய்தி வ்ந்துகொண்டிருக்கும் பொழுதே தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் list ம் வருகிறது. அவர்களுக்கு எத்தனையோ தனித்திறமைகள் இருந்தும் மார்க் என்ற ஒரு அமிலத்தால் அந்த மொட்டுக்கள் கருக்கப்படுவது தான் வேதனை.

    இதெல்லாம் சரி. 10ம் வகுப்பில் முதலிடம் வந்த எத்தனை மாணவர்கள் 12ம் வகுப்பில் முதலிடம் வருகின்றனர்? தப்பித் தவறி ஒன்றிரண்டு மாணவர்கள் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். இந்த மீடியாகள் முதலிடம் பெற்றவர்களை உலகிற்குக் காட்டவில்லை. மாறாக அந்த மாணவர்களின் தலையில் கர்வம் என்னும் அரக்கனை ஏற்றிவிடுகிறார்கள். இது அவர்களின் வாழ்கையை வெறும் 2 வருடத்தில் மாற்றிவிடுகிறது.

  ஊடகங்களே உங்களுக்கு ஒர் வேண்டுகோள். தயவுசெய்து முதலிடம் பெற்ற மாணவனின் செய்தியை மீண்டும் மீண்டும் போட்டு அவர்கள தன் நிலையை மறக்கச் செய்யாதீர்கள்

  பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் முதலிடம் பெற்றால் அவர்களுடன் இணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். அதே நேரத்தில் வாழ்க்கை இத்துடன் முடிவத்தில்லை. இதுதான் ஆரம்பம் என்று மெல்லியாதக அறிவுருத்துங்கள். அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

  மாறாக உங்கள் குழந்தைகள் தோல்வியுற்றால் திட்டாதீர்கள். கனிவாக எடுத்துச் சொல்லுங்கள். உங்களின் வார்த்தைகள் ,உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் தேர்வில் முதலிடம் பெற்று உங்கள் முகங்களையும் ஊடகங்களின் முன்னிற்கச் செய்யலாம்.
 

Thursday, May 30, 2013

குமாரசாமியின் காமெடி பேச்சு

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி காவிரி நீரை சமமாக  இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனக்கூறியுள்ளார். இதைக் கூறியது சென்னை விமானநிலையத்தில். உண்மை நிலை என்ன? இவர் முதல்வராக இருந்தபோது என்ன செய்தார் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. இது போகட்டும் காவிரி நீரைப் பகிர்தல் என்பது மழை  அணைகளின் நீர் இருப்பு  மற்றும் நீர்வரத்து ஆகியவற்றைப் பொருத்தது. கர்நாடக மக்கள், அரசியல்வாதிகளின் போலியான பேச்சுக்கு செவிசாய்கின்றன்ர். காவிரி தவிர்த்து அம்மாநிலத்தின் பொதுவான கட்டமைப்பு எப்படிய்ள்ளது? சமிபத்தில் கர்நாடகச் சுற்றுப் பயணம் செய்தபோது ஒன்று தெளிவாகத் தெரிந்தது. மின்சாரம் என்பது பெங்களுருவில் 2 மணிநேரம் தடை. மற்ற இடங்களில்? அதிக பட்சமே 2 மணி நேரம் தான் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டனர். சாலை வசதி? அது அத்ற்குமேல். பல இடங்களில் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது.

    இதற்கெல்லாம் கவனம் கொடுக்காமல் காவிரி ஒன்றையே ப்ரதானமாக வைத்துக் கொண்டு ஆட்சியை சுகமாக நடத்துகின்றனர். காவிரிக்காக லபோதிபோ வென்று குதிக்கும் "வாட்டாள்'நாகராஜ் போன்றவர்கள் மக்களின் இது போன்ற வாழ்வாதரப் பிர்ச்சனைகளுக்கும் குரல் கொடுக்கட்டும் . ஏற்கனவே உணவு உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து கொண்டுவரும் நேரத்தில் மக்களின் அடிபடை தேவைக்காக அரசியல்வாதிகள் உழைக்கட்டும்.


  இல்லையெனின் "நடந்தாய் வாழி காவேரி" என்பது " முடக்கு வாத காவேரி"யாக மாற்றிவிடும்.

Thursday, May 16, 2013

"அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி இம்முறை அதிகம். தனியார் பள்ளிகளில் சென்றமுறை 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் பல் இந்தத் தடவை 100% பெறவில்லை."--- செய்தி.  இந்தச் செய்தியைச் சொல்லி மகிழும் பெற்றோர்கள் யாவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். முதலில் தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கட்டும். இப்பொழுது ஆங்கிலவழி படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்டையான வாய்ப்பாடு தெரியவைல்லை. இவர்களுக்கு மனகணக்கு என்பது மிகவும் கொடுமையான் விஷயமாக உள்ளது. இந் நிலை எப்போது மாறும்?

Wednesday, May 15, 2013

சித்தராமையாவை  எதிர்த்து மல்லிகார்ஜுன கார்கே ஆதரவாளர்கள் போராட்டம்.- செய்தி. காங்கிரஸ்னாலே கலகம் தானேப்பா
"கூடங்குளம் மின் உற்பத்தி ஜுன் மாதத்திற்கு ஒத்திவைப்பு"- செய்தி.
பேசாமல்  15 நாட்களுக்கு ஒரு முறை ஒத்திவைக்கப்படும் என அறிவித்துவிடலாம். மக்களின் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படாமசும், அதே நேரத்தில் போராட்டக்காரகளை போராடவிடாமலும் செய்துவிடலாம். ஒரே கல்லில் 2 மாங்காய்

Sunday, May 12, 2013

ஓசுர் நகருக்குள் யானைகள் வந்தன. - செய்தி. காடுகளுக்குள் தண்ணீர் இல்லாத போது அவை நகருக்குள் வருகின்றன. இனியாவது வனங்களை பாதுகாக்க வேண்டும். இல்லையெனின் புலி, சிறுத்தை போன்ற மிருகங்களும் ஊருக்குள் வந்துவிடும். மரம் வள்ர்ப்போம். வனங்கள் காப்போம்

Saturday, May 11, 2013

sudhakumaar: யாரேனும் எஸ். ராமகிருஷ்ணனின் "யாமம்" புத்தகம் படித...

sudhakumaar: யாரேனும் எஸ். ராமகிருஷ்ணனின் "யாமம்" புத்தகம் படித...: யாரேனும் எஸ். ராமகிருஷ்ணனின் "யாமம்" புத்தகம் படித்தீர்களா? முடிந்தால் படிக்கவும். தற்சமயத்தில் நான் படித்த நாவல்களில் மிகவும் பா...