Pages

Saturday, April 23, 2016

குடும்பச் சானலும் , குதர்க்க குடும்பமும்

இடம்: மத்திய தர குடும்பம் வசிக்கும் வீடு.
பாத்திரம். ராகவன் அவர் மனைவி சாந்தா, மற்றும் குடும்பச் சானல் ஆட்கள்.

சானல்: வணக்கம், நாங்க குடும்பச் சானலிலிருந்து வருகிறோம்
.
ராகவன்: வணக்கம். எந்த குடும்பச் சானல்? திமுக வா? அதிமுக வா? கேப்டனா? பாமக வா? அல்லது ஸ்டார் டிவி குடும்பமா?

சானல்: அதெல்லாம் இல்லைங்க. இது "குடும்பச் சானல்"

ரா:. ஓ.. இந்த எல்லோருடைய கருத்துக்களையும் பதிவு பண்ணிட்டே இருப்பாரே "வரதராஜ் முண்டே". அப்புறம் கேள்வி கேட்டுட்டு எதுக்கு சிரிக்கிறோம்னு தெரியாம சிரிப்பாரே "கிரிதரன்" அந்த சானலா?

சானல்: அந்த சானல் இல்லைங்க. நாங்க குடும்ப பெண்களுக்குத் தேவையான வீட்டுக்குறிப்பெல்லாம் சொல்லுவோம், முக்கியமா வென்னீர் போடறது, அடுப்பு பத்தவக்கிறது அது பத்தி...

ரா: ஓகே.. ஓக்கே... இப்போ எதுக்கு எங்க வீட்டுக்கு வந்திருக்கிங்க?
சானல்: அதுவா.. ஒங்கள சில கேள்விகள் கேட்போம். முடிவில ஒரு பரிசு கொடுப்போம்.

ரா: நல்லது

சேனல்:  ஆனால் கேள்விகள் அனைத்தும் பெண்களுக்குத்தான்.
.
சானல்: பேட்டிய நடு வீட்டுக்குள்ள வச்சிக்கலாமா? அல்லது தோட்டத்துல வச்சிக்கலாமா?

ரா: இது அக்ரஹாரம். இங்க தனியா தோட்டமெல்லாம் கிடையாது
.
சேனல்: (சாந்தவிடம்) நீங்கள் house wifeஆ?

சாந்தா: (ராகவனை காட்டி) இல்லைங்க 20 வருஷமா நான் அவரோட wife தாங்க.

சே: அது இ்ல்லைங்க. நீங்க வேலைக்குப் போறவவங்களானு கேக்கறோம்.

சா: ஒ அதுவா! நான் வீட்டில இருக்கிறப்போ house wife ங்க. Office போனா office wife ங்க..

சேன்: நீங்க facebook twitter இதுல account வச்சிருக்கிங்களா?

சாந்: இல்லங்க nationalised bank ல தான் வச்சிருக்கோம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இரு்க்கிறத இழந்துடக்கூடாது பாருங்க.

சேன்: facebook twitter கறது சமூக வலைதளங்கள்.

சாந்: எங்க வீட்டுல எப்பவாவது சிலந்திதான் வலை போடும். அதையும் என் husband உடனே clean பண்ணிடுவார்.

சேன்: அதவிடுங்க.. உங்க வாழ்க்கையில நடந்த ஏதாவது சுவையான நிகழ்ச்சிய சொல்லுங்க.

(ராகவனனும் சாந்தாவும் குசு குசுப்பாக பேசுகின்றனர்)

சாந்: பல நிகழ்ச்சிகள் இருக்கு எத சொல்லறது..

சான: (உற்சாகமாகி) சமீபத்துல நடந்த ஒண்ணச் சொல்லுங்களேன்..

சாந்: சமீபத்துல நடந்ததுனா..ஆங்.. போன வாரம் நடந்தது.

சான: சொல்லுங்க..

சாந்: நான் ,என் கணவர் அப்புறம் குழந்தைகள் எல்லோருமா சேர்ந்து மால்குடி மிட்டாய் போய் கருப்பட்டி மிட்டாய் சாப்பிட்டோம். நல்ல sweet ஆ இருந்தது.

சானல்: ஏங்க கடிக்காதீங்க..

சாந்: போனவாரம் சாப்பிட்டத இந்தவாரம் கடிக்காத னா எப்படி

சானல்: அய்யோ அய்யய்யோ.. இனிமே யாரையுமே பேட்டி எடுக்க போகவே மாட்டேன்..
(தலைதெறிக்க ஓடுகிறார்)

ராகவனும் சாந்தாவும் வாசற்கதவை மூடிவிட்டு வருகின்றனர்.

சாந்தா ராகவனிடம்.:
அவனவன் பருப்பு விலை உயர்வு அரிசி விலை உயர்வு தண்ணீர் கஷ்டம்னு கவலைப் பட்டுண்டு இருக்கிற நேரத்தில பேட்டி ,பரிசு சுவையான நிகழ்ச்சினு  வந்துட்டானுக.. இனிமே பேட்டி எடுப்பாங்க..

திரை

Monday, January 12, 2015

யோகா - ஒர் பார்வை.

        மூட்டுவலி என்பது இன்றைய நாட்களில் ஒர் சாதாரணமான விஷயம்.  ஒரு கவளம் அளவிற்கு மாத்திரை உண்பது என்பது சர்வசாதாரணமாக உள்ளது. இதை தடுப்பது மற்றும் வருவதற்கு முன்பே கூட நிறுத்த முடியும்.

  சில எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் போதுமானது. யோகா வினால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும். தினமும் காலை  அல்லது மாலை முடிந்தால் இருவேளையும் 15 நிமிடப் பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

  பெரிய அளவில் உணவுக் கட்டுப்பாடு கிடையாது. மேலும் மூட்டு  வலி மட்டுமல்லாது இரத்தக் கொதிப்பு, கொழுப்பு சத்து  ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

  யோகப்பயிற்சி என்பது விபூதி கொடுக்கும் செயல் அல்ல. அதெல்லாம் செய்ய நினைத்தாலும் முடியாது. ஆனால் நாமே நம்மை உணர்ந்து கொள்ளவும், உற்சாகமாக வாழவும் உதவும் என்பதில் ஐயமில்லை

Sunday, August 11, 2013

வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன்

  ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றதும் நம்  நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும் பால்கோவாவும் தான். ஆனால் அங்குள்ள சிவன் கோவிலின் பெருமையை பெரும்பாலனவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

   பாடல் பெற்ற சிவதலமான இக் கோயில் ஸ்ரீவில்லிபுதூர் - தென்காசி சாலையில் அமைந்துள்ளது. சிவ பெருமான் வைத்தியநாதனாக சிவகாமி அம்பாள் சமேதராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். எல்லா சிவன் கோவிலைப் போலவே இதுவும் அமைந்துள்ள இக் கோயிலின் தனிச் சிறப்பு  என்ன?

   இச் சிவன் பல்வேறு வியாதிகளுக்கு வைத்தியம் (அருள்) செய்கிறார். முக்கியமாக இங்கு நடைபெறும் மகாதேவ அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாதேவ அஷ்டமியன்று முதல் பந்தியில் சிவன் உண்பதாக ஐதீகம். ஆகவே இந்த பந்தி முடிந்ததும் பொதுமக்கள் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்  செய்வது வழக்கம்.

   இதில் ஜாதி பேதமின்றி, பதவி, பணம் , அந்தஸ்து பாகுபாடின்றி பலரும் உருளுவதைக் காணலாம். இதில் அங்கப்பிரதட்சணம் செய்தால் தீராத வயிற்றுவலி தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. அதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். இதுவும் தவிர பலரும் பல வேறு கோரிக்கைகளுக்காக நேர்ந்து அங்கப்பிரதட்சிணம் செய்வர்.

  இதுவும் தவிர பலரும் அறியாத விஷயம் இது. சிவனுக்கு அபிஷேகம் செய்யும் முதல் தீர்த்தத்தை பருகினால் புற்று நோய்க்கு அருமருந்தாகும்.  சிவனுக்கு திருவனந்தலுக்கு பால் கொடுப்பதன் மூலம் வலிப்பு நோய் தீரும்.

  இதையும் தவிர பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள இக் கோயிலை வாழ்க்கையி ஒரு முறையேனும் தர்சித்தேதீர வேண்டும் என்று சங்கல்ப்பம் செய்து கொண்டு வாருங்கள். வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன். சிந்தை குளிர அருள்வான் சிவன்.

http://www.valaipookkal.com/http://www.thamizmanam.net

Friday, August 9, 2013

தெரிந்த கோயிலும் தெரியாத அற்புதங்களும்

 மானிடப் பிறப்பில் எந்த ஒரு உயிரும் இறைவனை உண்மையான பக்தி மற்றும் இறைத் தொண்டினால் அடைய முடியும். இதை ஒரு தெய்வம் நிருப்பித்தால் இன்னும் ஆதாரம் வலுவாக இருக்குமல்லவா?. அப்படி  ஒரு நிகழ்வு தான் ஸ்ரீ ஆண்டாள். பூமாதேவியே ஸ்ரீ ஆண்டாளாக உருவெடுத்து   பெருமாளின் பால் தீராத பக்தி கொண்டு அந்த ரெங்கனையே மணாளனாக அடைந்தாள். இது எப்படி சாத்தியம்? இதில் உள்ள தூய பக்தியே சாட்சி.

  ஆனால் இந்தக் கதையெல்லாம் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே நான் இதைப் பற்றி இன்று பேசப் போவதில்லை. அந்த பெண்தெய்வத்தின் திருக்கோவிலில் உள்ள மிகுந்த அதிர்வுள்ள பகுதிகளைப் பற்றி பேசப் போகிறேன்.

   நான் விவரிக்கும் இடத்தைப் பார்த்து இந்த இடமா? என்று தயவு செய்து சந்தேகப் படாதீர்கள். இது பன்னெடுங்காலமாக முன்னோர்கள் வழிபாடு செய்து  அதை வழி வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச்  சொல்லிவிட்டுச் சென்ற இடங்கள் இது.

  சரி மெதுவாக ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலுக்குள் நுழையுங்கள். அங்கு மேல்தடாகத்தில் இருக்கும் பெருமாளை தர்சித்து விட்டு   கீழே பக்கத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டு விட்டு மெதுவாக நந்தவனத்திற்குள்  நுழையுங்கள். அமைதியே உருவான அந்த இடத்தில் பறவைகள்  தங்களுடைய கூவலால் அன்புடன் வரவேற்கும்.

     தாயார் பிறந்த அந்த இடத்தை தரிசித்துவிட்டு முன்புறமுள்ள அந்த மண்டபத்தில் கண்மூடி அமருங்கள். அங்குள்ள அதிர்வுகள்  நம் மனோரதங்களை சொல்லாமலேயே நிறைவேறி கொடுக்கும்.   அங்கிருந்து வெளியே வந்து ஆண்டாள் கோவிலுக்குள்  சென்று வழிபாடுகள் முடித்தபின் உள் பிராகாரத்தில் தாயாரின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படத்தின் கீழ் அமர்ந்தோ அல்லது நின்ற வண்ணமோ நமது வேண்டுதல்களை தாயாரிடம் தெரிவிக்கலாம். இந்தப் பகுதியில் தெரிவிக்கபடும் பிரார்த்தனைகள்  தாயாரால் உடனடியாக நிறைவேற்றப் படுவதாக ஐதீகம். இதை செயலிலும் காணலாம். ஆனால் இன்றைய கூட்டமான சூழலில் அமைதியாக அமரமுடியவில்லை அல்லது ஒருமுகப் படவில்லை என்றால் அங்கிருந்து கிளம்பி வெளிபிராகாரத்திற்கு வந்துவிடுங்கள்.

      வெளிபிராகாரத்தில் உள்ள கை கூப்பிய ஆஞ்சநேயரை வணங்கி  அப்படியே நேராகச் சென்றால்  அங்கு பெரும்பாலும் பூட்டப் பட்டிருக்கும் ஸ்ரீராமர் சன்னதியில் அமருங்கள். இப்பகுதிக்கு பொது மக்கள் அதிகம் வருவதில்லை. ஆளரவமற்ற அந்தப் பகுதியில்  கண்மூடிஅமர்ந்தாலே  போதும் நம் உண்மையான முகம் நமக்குத் தெரிந்துவிடும். இந்த சக்திமிக்க அதிர்வுள்ள இந்த இடம் எதிர்காலத்தில் பெருந்திரளான மக்கள் அமர்ந்து வழிபடும் இடமாக  மாறப் போவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

   பிறகு  அப்பிராகாரத்தின் மறுபகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்கி வெளியே வந்துவிடலாம். ஆனால் இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பகுதிக்குச் சென்று வழிபட்டு வந்தால் சர்வ நிச்சயமாக, மன் இறுக்கம் மறைந்து  ஒரு நிம்மதியை கோயிலைவிட்டு வெளிவரும்  முன்னரே உணர்வீர்கள் என்பது உறுதி.

  அடுத்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் முயன்று பாருங்கள். பதில் கிடைக்கும்.
http://www.valaipookkal.com/
                                                                              புதிதாய் இன்னமும் சொல்வேன்......www.valaipookkal.comwww.thamizmanam.com

Sunday, August 4, 2013

இந்திய ராணுவம். - ஒரு சாதனைச் சிகரம்.

"  நாங்கள் கண்விழித்து காப்பதால் தான் நீங்கள் கண் மூடி நிம்மதியாகத் தூங்குகின்றீர்கள்"  - இது  எல்லைப் பகுதியைக் காக்கும் ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனும் கூறும் வாசகம்.   மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒர் சாதாரண வாசகமாகத் தெரியும். ஆனால்  அவர்கள் அங்கு ஆற்றும் அரும் பணிகள் யாவும் வெளியே தெரிவதில்லை.

   சமீபத்தில் facebook ல் இந்திய ராணுவத்தின் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ள பலவற்றை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உதாரணமாக ஒரு செய்தி. ஒரு சாதாரண ஏணியில் ஏறுவதற்கே நாம் பல முறை யோசித்து , பலமாக உள்ளதா என்று பார்த்து பின்புதான் ஏறுவோம். ஆனால் சியாச்சின் பகுதியில் பனிக்காற்றில் ஐஸ்கட்டிகள் பறக்க ஒரு மலையிலிருந்து மற்றோர் மலைக்கு ஏணி மூலமாக படுக்கை வசத்தில் கடக்கும் காட்சியை புகை படமாக எடுத்து அனுப்பியிருந்தனர். விழுந்தால் அதள் பாதாளம்.

     மயிர்கூர்செரியும் அக்காட்சியைப் பார்த்த பொழுது ஒவ்வொரு இந்திய ராணுவவீரன் மீதும் மரியாதை வந்தது. தேச நலனைப் பெரிதாகக் கருதாமல் ராணுவத்திற்காக வாங்கப் படும் ஒரு சிறு ஆணியில் கூட லஞ்சம் வாங்கும் நமது அரசியல் வாதிகள். தரமற்ற துப்பாக்கி முதல் ஹெலிக்காப்டர் வரை நம் தலையில் கட்டும் அந்நிய நாடுகள். தீபாவளி பொம்மைத்துப்பாக்கியைக் கூட சுட்டுப் பார்க்காத லோக்கல் அரசியல்வாதிகள் முதல் பிரதமர் கனவுகாணும் முலாயாம் வரை கண்மூடிக் கொண்டு இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் தலைவர்கள். வெள்ளித் திரையில் ஒரு கையில் துப்பாக்கியை ஏந்திய படி நீண்ட வசனம் பேசி பிறகு சிறு காயம் கூட படாமல் 5 அடி துரத்தில் எதிரியைத் தாக்கி அழிக்கும் நாயகர்கள். ஒரு முறையாவது எல்லைப் பகுதிக்குச் சென்று அவர்களை மகிழ்வித்திருப்பார்களா?
 
    இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு அன்பருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள். உங்களுக்கு face book ல் account இருந்தால் தயவு செய்து INDIAN ARMY பகுதியைத் தேர்ந்தெடுத்து LIKE கொடுங்கள். அவர்கள் அனுப்பும் அற்புதமான புகைப்படங்களுக்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது அவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்க வழிவகுக்கும். குடும்பம் குழந்தைகளைப் பிரிந்து எங்கோ ஒரு எல்லைப் பகுதியில் இந்த நாட்டைக் காக்கும் அந்த வீரர்களுக்கு ஒர் அருமருந்தாக இது அமையும்.http://www.thamizmanam.com/www.valaipokkal.com
   

Tuesday, July 30, 2013

தெலுங்கானா - கிளர்ச்சியின் திறவுகோல்

  இன்று ஐக்கிய முன்னணி கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் கூடி தனித் தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இனி இந்தியாவில் புதிய ஒரு மாநிலமாக தெலுங்கானா உருவாகும்.  இதன் மூலம் இந்திய வரைபடத்தில் ஒரு மாநிலத்திற்கான இடத்தில் புதிய வண்ணமாகத் தெரியும். அவ்வளவு தான். இதைத் தவிர வேறு எதுவும் புதிதாக நடந்துவிடப் போவதில்லை.

  இவ்வளவு நாட்களாக தனித் தெலுங்கானா கோரி போராட்டம் நடத்தியவர்கள் தெலுங்கானா என்ற மாநிலம் இல்லாததால் தான் ஆந்திரா மொத்தமும் வறுமையின் பிடியில் இருப்பது போலவும், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போலவும் பலவாறாக பேசி மக்களை, குறிப்பாக மாணவர்கள், அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் கிளர்ச்சியிலும் ஈடுபட மனமாற்றம் செய்தனர்.

  இனிமேல் மேற்சொன்ன எந்த கஷ்டமும் தெலுங்கானா மாநிலத்திற்கு வராது, தேனாறும், பாலாறும் வெள்ளமாக ஓடும் என்று நினைத்தால் அவர்கள் நினைப்பில் மண் தான் விழப் போகிறது. முதலில் நிர்வாகத்தில் எந்தெந்தப் பகுதி யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். அது ஒரு மாதிரியாக சரியான பின்புதான் மக்கள் சம்மந்தமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார்கள். இதற்கிடையில் தனித் தெலுங்கானா கூடாது என்று கூறும் அமைப்பினர்களின் கிளர்ச்சியை வேறு இரு மாநிலங்களும் அடக்க வேண்டியிருக்கும்.இதையெல்லாம் விட இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வாழும் சராசரி மக்களின் நிலையே மிகவும் கஷ்டத்திற்குரியதாக இருக்கும். இவர்கள் எந்த ஒரு, அரசின் உதவியைப் பெற வேண்டியிருந்தாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்தின் காரணமாக அலைக்கழிக்கப் படுவார்கள். (இதில் அரசு அதிகாரிகளின் அலட்சியம் மிக அதிகமாக இருக்கும்)

    இனி மத்திய அரசிற்கு புதிய சிக்கல் ஏற்படும். இனி காங்கிரஸ் வரப் போவதில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் பா.ஜ.க வும் தனித் தெலுங்கானா விற்காக போரட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் எதிர்காலத்தில்  எந்த ஒரு தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடந்தாலும் பா.ஜ.க வும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உடனடியாக கூர்க்காலாந்து பிரச்சனை துவங்கிவிடும். அவர்கள் ஏதடா சாக்கு என்று காத்திருந்தார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

   பிறகு விதர்பா மாநிலம், அப்புறம் வேறு ஏதாவது ஒன்று என்று புதிது புதிதாக கிளம்பிக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம்  தங்களுக்கென்று மாநிலக் கோரிக்கையை வைக்கும். இதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு இந்த கிளர்ச்சியாளர்களை அடக்கவே நேரம் சரியாக இருக்கும். சாலையின் ஒரங்களில் உள்ள மரங்கள் யாவும் நடு ரோட்டில் கிடக்கும். பெரும் பாறைகள் யாவும் தண்டவாளங்களுக்கு  குறுக்கில் போடப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கீழ் நோக்கிச் செல்லும். இதைத் தவிர வேறுஎதுவும் புதிதாகவும் உருப்படியாகவும்  நிகழப்போவது ஓன்றும் இல்லை.http://www.thamizmanam.com/www.valaipookkal.com