Pages

Sunday, August 11, 2013

வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன்

  ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றதும் நம்  நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும் பால்கோவாவும் தான். ஆனால் அங்குள்ள சிவன் கோவிலின் பெருமையை பெரும்பாலனவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

   பாடல் பெற்ற சிவதலமான இக் கோயில் ஸ்ரீவில்லிபுதூர் - தென்காசி சாலையில் அமைந்துள்ளது. சிவ பெருமான் வைத்தியநாதனாக சிவகாமி அம்பாள் சமேதராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். எல்லா சிவன் கோவிலைப் போலவே இதுவும் அமைந்துள்ள இக் கோயிலின் தனிச் சிறப்பு  என்ன?

   இச் சிவன் பல்வேறு வியாதிகளுக்கு வைத்தியம் (அருள்) செய்கிறார். முக்கியமாக இங்கு நடைபெறும் மகாதேவ அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாதேவ அஷ்டமியன்று முதல் பந்தியில் சிவன் உண்பதாக ஐதீகம். ஆகவே இந்த பந்தி முடிந்ததும் பொதுமக்கள் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்  செய்வது வழக்கம்.

   இதில் ஜாதி பேதமின்றி, பதவி, பணம் , அந்தஸ்து பாகுபாடின்றி பலரும் உருளுவதைக் காணலாம். இதில் அங்கப்பிரதட்சணம் செய்தால் தீராத வயிற்றுவலி தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. அதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். இதுவும் தவிர பலரும் பல வேறு கோரிக்கைகளுக்காக நேர்ந்து அங்கப்பிரதட்சிணம் செய்வர்.

  இதுவும் தவிர பலரும் அறியாத விஷயம் இது. சிவனுக்கு அபிஷேகம் செய்யும் முதல் தீர்த்தத்தை பருகினால் புற்று நோய்க்கு அருமருந்தாகும்.  சிவனுக்கு திருவனந்தலுக்கு பால் கொடுப்பதன் மூலம் வலிப்பு நோய் தீரும்.

  இதையும் தவிர பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள இக் கோயிலை வாழ்க்கையி ஒரு முறையேனும் தர்சித்தேதீர வேண்டும் என்று சங்கல்ப்பம் செய்து கொண்டு வாருங்கள். வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன். சிந்தை குளிர அருள்வான் சிவன்.

http://www.valaipookkal.com/http://www.thamizmanam.net

Friday, August 9, 2013

தெரிந்த கோயிலும் தெரியாத அற்புதங்களும்

 மானிடப் பிறப்பில் எந்த ஒரு உயிரும் இறைவனை உண்மையான பக்தி மற்றும் இறைத் தொண்டினால் அடைய முடியும். இதை ஒரு தெய்வம் நிருப்பித்தால் இன்னும் ஆதாரம் வலுவாக இருக்குமல்லவா?. அப்படி  ஒரு நிகழ்வு தான் ஸ்ரீ ஆண்டாள். பூமாதேவியே ஸ்ரீ ஆண்டாளாக உருவெடுத்து   பெருமாளின் பால் தீராத பக்தி கொண்டு அந்த ரெங்கனையே மணாளனாக அடைந்தாள். இது எப்படி சாத்தியம்? இதில் உள்ள தூய பக்தியே சாட்சி.

  ஆனால் இந்தக் கதையெல்லாம் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே நான் இதைப் பற்றி இன்று பேசப் போவதில்லை. அந்த பெண்தெய்வத்தின் திருக்கோவிலில் உள்ள மிகுந்த அதிர்வுள்ள பகுதிகளைப் பற்றி பேசப் போகிறேன்.

   நான் விவரிக்கும் இடத்தைப் பார்த்து இந்த இடமா? என்று தயவு செய்து சந்தேகப் படாதீர்கள். இது பன்னெடுங்காலமாக முன்னோர்கள் வழிபாடு செய்து  அதை வழி வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச்  சொல்லிவிட்டுச் சென்ற இடங்கள் இது.

  சரி மெதுவாக ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலுக்குள் நுழையுங்கள். அங்கு மேல்தடாகத்தில் இருக்கும் பெருமாளை தர்சித்து விட்டு   கீழே பக்கத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டு விட்டு மெதுவாக நந்தவனத்திற்குள்  நுழையுங்கள். அமைதியே உருவான அந்த இடத்தில் பறவைகள்  தங்களுடைய கூவலால் அன்புடன் வரவேற்கும்.

     தாயார் பிறந்த அந்த இடத்தை தரிசித்துவிட்டு முன்புறமுள்ள அந்த மண்டபத்தில் கண்மூடி அமருங்கள். அங்குள்ள அதிர்வுகள்  நம் மனோரதங்களை சொல்லாமலேயே நிறைவேறி கொடுக்கும்.   அங்கிருந்து வெளியே வந்து ஆண்டாள் கோவிலுக்குள்  சென்று வழிபாடுகள் முடித்தபின் உள் பிராகாரத்தில் தாயாரின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படத்தின் கீழ் அமர்ந்தோ அல்லது நின்ற வண்ணமோ நமது வேண்டுதல்களை தாயாரிடம் தெரிவிக்கலாம். இந்தப் பகுதியில் தெரிவிக்கபடும் பிரார்த்தனைகள்  தாயாரால் உடனடியாக நிறைவேற்றப் படுவதாக ஐதீகம். இதை செயலிலும் காணலாம். ஆனால் இன்றைய கூட்டமான சூழலில் அமைதியாக அமரமுடியவில்லை அல்லது ஒருமுகப் படவில்லை என்றால் அங்கிருந்து கிளம்பி வெளிபிராகாரத்திற்கு வந்துவிடுங்கள்.

      வெளிபிராகாரத்தில் உள்ள கை கூப்பிய ஆஞ்சநேயரை வணங்கி  அப்படியே நேராகச் சென்றால்  அங்கு பெரும்பாலும் பூட்டப் பட்டிருக்கும் ஸ்ரீராமர் சன்னதியில் அமருங்கள். இப்பகுதிக்கு பொது மக்கள் அதிகம் வருவதில்லை. ஆளரவமற்ற அந்தப் பகுதியில்  கண்மூடிஅமர்ந்தாலே  போதும் நம் உண்மையான முகம் நமக்குத் தெரிந்துவிடும். இந்த சக்திமிக்க அதிர்வுள்ள இந்த இடம் எதிர்காலத்தில் பெருந்திரளான மக்கள் அமர்ந்து வழிபடும் இடமாக  மாறப் போவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

   பிறகு  அப்பிராகாரத்தின் மறுபகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்கி வெளியே வந்துவிடலாம். ஆனால் இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பகுதிக்குச் சென்று வழிபட்டு வந்தால் சர்வ நிச்சயமாக, மன் இறுக்கம் மறைந்து  ஒரு நிம்மதியை கோயிலைவிட்டு வெளிவரும்  முன்னரே உணர்வீர்கள் என்பது உறுதி.

  அடுத்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் முயன்று பாருங்கள். பதில் கிடைக்கும்.
http://www.valaipookkal.com/
                                                                              புதிதாய் இன்னமும் சொல்வேன்......www.valaipookkal.comwww.thamizmanam.com

Sunday, August 4, 2013

இந்திய ராணுவம். - ஒரு சாதனைச் சிகரம்.

"  நாங்கள் கண்விழித்து காப்பதால் தான் நீங்கள் கண் மூடி நிம்மதியாகத் தூங்குகின்றீர்கள்"  - இது  எல்லைப் பகுதியைக் காக்கும் ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனும் கூறும் வாசகம்.   மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒர் சாதாரண வாசகமாகத் தெரியும். ஆனால்  அவர்கள் அங்கு ஆற்றும் அரும் பணிகள் யாவும் வெளியே தெரிவதில்லை.

   சமீபத்தில் facebook ல் இந்திய ராணுவத்தின் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ள பலவற்றை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உதாரணமாக ஒரு செய்தி. ஒரு சாதாரண ஏணியில் ஏறுவதற்கே நாம் பல முறை யோசித்து , பலமாக உள்ளதா என்று பார்த்து பின்புதான் ஏறுவோம். ஆனால் சியாச்சின் பகுதியில் பனிக்காற்றில் ஐஸ்கட்டிகள் பறக்க ஒரு மலையிலிருந்து மற்றோர் மலைக்கு ஏணி மூலமாக படுக்கை வசத்தில் கடக்கும் காட்சியை புகை படமாக எடுத்து அனுப்பியிருந்தனர். விழுந்தால் அதள் பாதாளம்.

     மயிர்கூர்செரியும் அக்காட்சியைப் பார்த்த பொழுது ஒவ்வொரு இந்திய ராணுவவீரன் மீதும் மரியாதை வந்தது. தேச நலனைப் பெரிதாகக் கருதாமல் ராணுவத்திற்காக வாங்கப் படும் ஒரு சிறு ஆணியில் கூட லஞ்சம் வாங்கும் நமது அரசியல் வாதிகள். தரமற்ற துப்பாக்கி முதல் ஹெலிக்காப்டர் வரை நம் தலையில் கட்டும் அந்நிய நாடுகள். தீபாவளி பொம்மைத்துப்பாக்கியைக் கூட சுட்டுப் பார்க்காத லோக்கல் அரசியல்வாதிகள் முதல் பிரதமர் கனவுகாணும் முலாயாம் வரை கண்மூடிக் கொண்டு இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் தலைவர்கள். வெள்ளித் திரையில் ஒரு கையில் துப்பாக்கியை ஏந்திய படி நீண்ட வசனம் பேசி பிறகு சிறு காயம் கூட படாமல் 5 அடி துரத்தில் எதிரியைத் தாக்கி அழிக்கும் நாயகர்கள். ஒரு முறையாவது எல்லைப் பகுதிக்குச் சென்று அவர்களை மகிழ்வித்திருப்பார்களா?
 
    இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு அன்பருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள். உங்களுக்கு face book ல் account இருந்தால் தயவு செய்து INDIAN ARMY பகுதியைத் தேர்ந்தெடுத்து LIKE கொடுங்கள். அவர்கள் அனுப்பும் அற்புதமான புகைப்படங்களுக்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது அவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்க வழிவகுக்கும். குடும்பம் குழந்தைகளைப் பிரிந்து எங்கோ ஒரு எல்லைப் பகுதியில் இந்த நாட்டைக் காக்கும் அந்த வீரர்களுக்கு ஒர் அருமருந்தாக இது அமையும்.http://www.thamizmanam.com/www.valaipokkal.com